பொய்யும் மெய்யும்
*குட்டிக்கதை* * *பொய்யும் மெய்யும்* * *எங்க ஊர்ல அய்யா கண்ணு* *வாத்தியார்னு* *ஒருத்தர்* இருந்தார். ஆரம்ப பாடசாலையிலே வேலை.கதை நல்லா சொல்லுவார்.. ஆனால், அத்தனையும் பொய் கலந்திருக்கும்.. கற்பனை ஓட்டம் மிக நேர்த்தியாக இருக்கும்... சொல்வதெல்லாம் உண்மை போல இருக்கு... பாதி பொய் கலந்திருக்கும்.... டே! பசங்களா ! உங்க வயசுல நான் சிலம்பம் கற்று நல்ல தேர்ச்சி பெற்றவன்டா ! ஒரு முறை படைவீச்சு வீசும் போது கால் இடறிவிட்டது அதுல இருந்து இப்ப வர கம்பு தொடுவதில்லை என்று சலித்துக் கொள்வார்... ஆனா சிலம்பு கலையில் சிலாவரிசை கூட தெரியாது. அவர் கால் வழுக்கி வயலில் விழுந்தது இருட்டுல தண்ணீர் பாய்ச்சிய போது, லேசா கால் சுணக்கம் போட்டு நடப்பார். இவர் ஊரு விட்டு ஊர் வந்ததால அந்த விபரம் யாருக்கும் தெரியாது. வர்மக் கலை அத்துபடிடா!எங்க தாத்தா சாகும் போது சத்தியம் வாங்கிட்டாருடா ! அதனால் தான் அதை யாருக்கும் காத்துக் கொடுக்க முடியாமல் போயிட்டது என்று வாய் கூசாமல் பொய் சொல்லுவார். இதைக் கேட்ட பசங்களுக்கு நாமும் நம் ஆசிரியரைப் போல பல கலைகளை கற்க வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கியது... அடே! நான் ச...