Posts

Showing posts from November, 2020

ஒன்றுபட்ட முழு மனதுடன்

.......................................................... *''ஒன்றுபட்ட முழு மனதுடன்...!"* ........................................................ வாழ்வில் வெற்றி பெறுவதன் மறைபொருள்(இரகசியம்) என்ன...? வாழ்க்கையை மனத் திண்மையோடு அதன் போக்கில் எதிர்கொள்ளுதலே வாழ்வில் மறைந்திருக்கும் மறைபொருளும் அதைத் தொடர்ந்து வரும் வெற்றியும்... நாளும் நாம் செய்யும் நம் வேலைகளில் எது முதன்மையானது...? எது அதன் பின் வருவது...? என்று வரிசைப்படுத்தி நம் மனதைக் குவித்து ஈடுபட பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும்... இது நடக்குமோ?, நடக்காதோ! என்கிற எதிர்மறை எண்ணங்களை அறவே ஒதுக்கித் தள்ளி நம்பிக்கையுடன் கற்றுக்கொள்ள வேண்டும்... இது தொடர்பாக ஒரு கதை இதோ... கருவுற்றிருந்த மான் ஒன்று பிரசவிப்பதற்குத் தகுந்த இடம் ஒன்றைத் தேடி அலைந்து, ஒரு நதிக் கரையில் அடர்ந்த புல்வெளியொன்றைத் தேர்ந்தெடுத்தது... அது பாதுகாப்பான இடமாக அதற்குத் தோன்றியது. அங்கு வந்து சேர்ந்ததும் அதற்குப் பிரசவ வலியும் ஆரம்பித்து விட்டது... வலியினூடே அக்கம் பக்கம் நோட்டம் விட்டது... இடதுபக்கம் ஒரு வேடன் கையில் வில் அம்புடன் மானைக் குறி பார்...

கவலையோடு வாட வேண்டாம். இயல்பாக இருப்போம்

ஒரு நரி அதிகாலை எழுந்து மேற்கு நோக்கி வேட்டைக்குப் புறப்பட்டது. கிழக்கே இருந்து எழுந்த சூரிய ஒளியில் அதன் நிழல் வெகு நீளமாய் வெகு பிரமாண்டமாய்த் தெரிந்தது. நரிக்கு ஏக குஷி… “நான் ரொம்பப் பெரிய ஆளாக்கும். இவ்வளவு பெரிய எனக்குப் பசி தீர வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஒரு யானை அல்லது ஒட்டகமாவது கிடைத்தால் தான் கட்டுப் படியாகும்!’ என்று ஊளையிட்டது. கொஞ்சம் சின்ன விலங்குகளை ஏளனத்துடன் அலட்சியப் படுத்தியபடி தன் பசிக்குக் குறைந்தபட்சம் ஒரு யானை, யானை என்றபடி காடு முழுவதும் ஓடிக் கொண்டே இருந்தது. தேடிக் கொண்டே இருந்தது; பாவம், ஒன்றும் கிடைக்கவில்லை. மதியம் தலைக்கு மேலே உச்சியில் சூரியன் வந்தபோது நரியின் நிழல் சிறுத்து அதன் காலடியில் விழுந்திருந்தது.”ஆஹா… பசியால் நாம் எவ்வளவு இளைத்துப் போய்விட்டோம்…’ சிறுத்து விட்டோம் என்று வருந்தியது நரி. இளைத்துப் போன இந்த அளவுக்கு ஒரு ஆட்டுக் குட்டியோ, கோழியோ கிடைத்தால் கூட போதுமானது என்று தேடியது. ம்ஹூம், பயனில்லை. மாலையில் மேற்கே வந்த சூரியனால் நரியின் நிழல் நரிக்குப் பின்பாக விழுந்தது… அதனால், நரிக்குத் தன் நிழலே தெரிய வில்லை…”ஆஹா.. நாம் வெகுவாக இளைத்து வ...

வாழ்கை பாடம்

சீன அதிபர் சொன்ன தத்துவக் கதை. ``சிறு வயதில் நான் மிகுந்த சுயநலக்காரனாக இருந்தேன். நல்ல பொருள் எதுவாக இருந்தாலும், எது கிடைத்தாலும், அதை நானே கைப்பற்றிக் கொள்வேன். இந்தக் குணத்தின் காரணமாகவே, மெதுவாக எல்லோரும் என்னை விட்டு விலக ஆரம்பித்தார்கள்.   ஒரு கட்டத்தில் எனக்கு நண்பர்களே இல்லாமல் போய் விட்டார்கள். நானோ என் மீது தவறு இருக்கிறது என்றே நினைக்கவில்லை; மற்றவர்களைக் குறை சொல்லிக் கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் என் அப்பா எனக்குக் கற்றுக் கொடுத்த மூன்று வாக்கியங்கள் தாம்  வாழ்க்கையில் எனக்கு உதவியாக இருந்தன.  ஒருநாள் அப்பா, இரண்டு அகலமான பாத்திரங்களில் நூடுல்ஸ் சமைத்து எடுத்து வந்தார்.  அந்த இரண்டையும் சாப்பாட்டு மேஜை மேல் வைத்தார். ஒரு பாத்திரத்திலிருந்த நூடுல்ஸின் மேல் மட்டும் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது;   இன்னொன்றின் மேல் முட்டையில்லை. அப்பா என்னிடம் கேட்டார்... `கண்ணு... உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ, நீயே எடுத்துக் கொள்!’ என்றார். அந்த நாட்களில் முட்டை கிடைப்பது அரிதாக இருந்தது. புத்தாண்டின் போதோ, பண்டிகைகளின் போதோ தான் எங்களுக்குச் சாப்ப...

புத்திசாலி

*சந்தைக்கடையில் இரண்டு பையன்கள் மீன் விற்றுக் கொண்டிருந்தனர்.   ஒரு வாடிக்கையாளர் வந்தார். முதல் பையனிடம் சென்று மீன் விலை விசாரித்தார். “ஒரு கிலோ 1௦௦ ருபாய் ஆகும், சார்,” என்று அவன் கூறினான். சற்று தூரத்தில் இரண்டாவது பையனும் அதே வகை மீனை வைத்துக் கொண்டிருந்தான் அவனை அணுகினார். விலை என்னவென்று விசாரித்த போது, அவனோ, “ மீன் விலை ஒரு கிலோ 5௦௦ ருபாய் ஆகும், சார்,” என்று கூறினான். விலையைக் கேட்டுத் திடுக்கிட்டுப் போன அவர், “ என்னப்பா இது ? அந்தப் பையனும் இதே மாதிரி மீன் தான் வைத்திருக்கிறான். அவன் விலை 1௦௦ ருபாய் என்று சொல்கிறான். நீ அதே மாதிரி மீனுக்கு விலை 5௦௦ ருபாய் என்று சொல்கிறாயே. இது நியாயமா?” என்று வினவினார். அந்தப் பையனோ கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் சொன்னான்: “ சார், பார்க்கத் தான் இரண்டும் ஒரே மாதிரியாகத் தெரியும். ஆனால் என்னுடைய மீன் மிகவும் விசேஷமானது. அதனால் தான் கூடுதல் விலை,” என்றான். “அப்படி என்னப்பா விசேஷம் உன் மீனில் இருக்கிறது?” என்று கேட்டார் வாடிக்கையாளர். “சார், இது புத்திசாலியான மீன். இதைச் சாப்பிடுபவர்களும் நாளடைவில் புத்திசாலியாகி விடுவார்கள். அதனால் தான் ...

கிடைத்தவைகளை அனுபவிக்கத் தெரியாமல், கிடைக்காதவைகளைதேடி அலைந்து, உடலும் - மனமும் சோர்ந்து, துன்பப்படுகிறோம்

*ஒருவர் ஒரு வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு, பணப் பெட்டியை பின்னால் மாட்டிக்கொண்டு, டூவீலரில் வேகமாகச் செல்லுகிறார்.* வண்டியின் அதிர்வில், அந்தப் பெட்டி லேசாகத் திறந்துகொண்டு, *100 நூறு ரூபாய் நோட்டுகள் கொண்ட ஒரு கட்டு, கீழே விழுந்து விடுகிறது.* அது தெரியாமல் அந்த நபர், வண்டியை ஓட்டிக்கொண்டு சென்று விடுகின்றார். *(அந்த நபர், இக்கதையில், இனி வரமாட்டார்)* கீழே விழுந்த வேகத்தில்,100 நூறு ரூபாய் நோட்டுகள் கொண்ட அந்த கட்டிலிருந்து, *ஒரே ஒரு நூறு ரூபாய் நோட்டு மட்டும், விடுபட்டு காற்றில் பறந்து, சிறிது தூரத்தில் கிடக்கிறது.* அந்த ஒற்றை நூறு ரூபாய் நோட்டு கிடந்த வழியில், ஒருவன் வருகிறான். அந்த நோட்டைக் கண்டு, *'இன்று எனக்கு அதிர்ஷ்டமான நாள் போல'* என நினைத்து, மிகவும் சந்தோஷ மடைகிறான். அந்த நோட்டை எடுத்துக்கொண்டு, நல்ல ஒரு ஹோட்டலுக்குப் போனான். *ஒரு தோசை (40ரூபாய்) ,2 இட்லி (இருபது ரூபாய்), ஒரு காப்பி (இருபது ரூபாய்) சாப்பிட்டான். வயிறும், மனதும் நிறைந்தது போல் இருந்தது.* *பில் வந்தது. பார்த்தான், GST வரியோடு 90 ரூபாய் ஆகியிருந்தது.* சர்வரிடம் நூறு ரூபாயைக் கொடுத்தான். சர்வர் பில்லைக் ...

துன்பம் இழைத்தவருக்குப் பதிலுக்குத் துன்பம் இழைத்துப் பழி வாங்குவது சாதாரண மனிதர்களின் இயல்பு

ஒரு புலி வேடனைத் துரத்திக்கொண்டு போயிற்று. வேடன் அருகில் இருந்த மரத்தில் ஏறிக் கொண்டான். அதற்கு முன்பே, மரத்தின் மீது ஒரு கரடி இருந்தது. புலி கரடியிடம் கூறிற்று: இவ்வேடன்: நமது மிருக குலத்துக்கே பகைவன்; இவனைக் கீழே தள்ளி விடு!  இவன் நமக்கு பகைவனாக இருக்கலாம் ஆனால், இவன் நான் இருந்த மரத்தை அண்டியதால் என்னிடம் சரண் புகுந்தவன் ஆகிறான். சரண் அடைந்தவனைக் கைவிட மாட்டேன் இவ்வாறு சொல்லிவிட்டு கரடி உறங்கிற்று. சற்று நேரம் கழித்து புலி வேடனிடம் கூறிற்று: எனக்கு பசியாக இருக்கிறது. நீ அந்தக் கரடியைக் கீழே தள்ளிவிட்டால், நான் அதை உண்டு பசியாறி உன்னை விட்டு விடுகிறேன். வேடன் கரடியைத் தள்ளிவிட்டான் கரடியோ மரத்தின் கீழ்க் கிளை ஒன்றைப் பிடித்துக் கொண்டு, விழாமல் தப்பி, மேலே ஏறிக் கொண்டது. அப்போது புலி கரடியிடம் சொன்னது. இந்த மனிதன் நன்றிகெட்டவன். சரண் அடைந்தவனைக் காப்பாற்றுவேன் என்ற உன்னையே தள்ளிவிட்டான். அவனை தள்ளிவிடு! அதற்கு கரடி சொன்னது: எவனோ ஒருவன் தன் ஒழுக்கத்தினின்று வழுவினான் என்பதற்காக நான் என் தர்மத்தைக் கைவிடக் கூடாது. இன்னமும் அவன் சரண் புகுந்தவனே. அவனைத் தள்ளுவது அறத்தினின்று நான் தவறி...

சொந்த ஊரை விட்டு பிழைப்பு தேடி ஓடி உலகின் எங்கெங்கோ மாட்டிக்கொண்ட அனைவருக்கும் பொருந்தும்

சென்னையில் வேலை பார்க்கும் இளைஞன். தன் கிராமத்திற்குச் சென்று 'நான் சென்னையில் ஒரு வீடு வாங்கப் போகிறேன். 5 லட்சம் பணம் வேண்டும்' என்று' தன் தந்தையிடம் கேட்டான். அதற்கு அவர்,'இன்னும் உனக்குத் திருமணமே ஆகவில்லை அதற்குள் என்ன அவசரம்?' என்றார். இப்பொழுது வாங்கினால் 30 லட்சத்தில் வாங்கி விடலாம் பிறகு வாங்கினால் குறைந்தது 60 லட்சம் தேவைப்படும். தினம் தினம் விலை ஏறிக் கொண்டே போகிறது என்றான். யோசித்த அப்பா,' சரியான முடிவு தான். ஆனால் நான் ஒரு விவசாயி உன்னைப் படிக்க வைக்க வாங்கிய கடனை உன் சம்பளத்தில் தான் அடைக்க ஆரம்பித்து இருகின்றோம். திடிரென்று 5 லட்சம் கேட்டால் எப்படி? என்றார். நமது விவாசய நிலத்தில் ஒரு பகுதியை விற்றுவிட்டு இங்கு வாங்கிய கடனை அடைத்து விட்டு மீதம் உள்ள பணத்தில் சென்னையில் வீடு வாங்கலாம் என்றான் அவன். ' 5 லட்சம் கொடுத்து விட்டு மீதம் உள்ள தொகைக்கு என்ன பண்ணுவாய்?' என்று கேட்க, மகன், அதற்கு வங்கிகள் கடன் தரும். அந்தக் கடனை மாதத் தவனை முறையில் 20 வருடத்திற்குள் செலுத்தி விடலாம்' என்றான். வீடு எப்படி இருக்கும் என்று அவர் கேட்க, 300 வீடுகள் கொண...

நல்லதே நினைப்போம்...நல்லதே நடக்கும்

ஒரு குட்டிக் கதை! ஆற்றங்கரைக்குத் தன் மனைவியை அழைத்துப் போயிருந்தார் ஒருவர்.  அவளிடம் ஒரு பையைக் கொடுத்தார்.  பெரிய பெரிய கற்களைக் காண்பித்தார். “இந்தப் பையை அந்தக் கற்களால் நிரப்பு” என்றார்.  மனைவி நிரப்பி எடுத்து வந்தாள்.  “இதற்கு மேல் நிரப்ப முடியாது” என்றாள். கணவர் கீழே கிடந்த கூழாங்கற்களில் சிலவற்றை எடுத்தார்.  அதே பையில் போட்டுக் குலுக்கினார். அவை பெரிய கற்களுக்கு நடுவில் இருந்த இடைவெளிகளில் உள்ளே இறங்கின. ஒரு கட்டத்தில் மேற்கொண்டு கூழாங்கற்களைப் போட இடம் இல்லை.  “இப்போதாவது நிரம்பிவிட்டதாக ஒப்புக் கொள்வீர்களா?” கேட்டாள் மனைவி. கணவர் அங்கேயிருந்த மணலை அள்ளிப் பையில் போட்டார்.  பையை மேலும் குலுக்கினார். கற்கள், கூழாங்கற்கள் இவற்றுக்கு இடையில் இருந்த இடைவெளிகளில் மணல் இறங்கியது.  “இதே பையை முதலில் மணலால் நிரப்பியிருந்தால், பெரிய கற்களுக்கு இடம் இருந்திருக்குமா? என்று கணவர் கேட்டபோது இருந்திருக்காது என்று ஒப்புக் கொண்டாள் மனைவி. “வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய அன்பு, கருணை, உடல்நலம், மனநலம் போன்ற உன்னதமான விஷயங்கள் பெரிய கற்கள் போன்றவை. வேலை, வீட...

யாரையும் நம்மால் திருத்த முடியாது

💐படித்ததில் பகிர்ந்தது💐 *வாழ்க்கை ஓர் அற்புதம்* ஓய்வு விடுதியில், ஒரு நாள் இரவு ஒரு முனிவரும் மாநிலஅமைச்சர் ஒருவரும் அடுத்தடுத்த அறைகளில் தங்கி இருந்தனர். இரவு முழுவதும் முப்பது அல்லது நாற்பது நாய்கள் அந்த விடுதியைச் சுற்றி குரைத்துக் கொண்டே இருந்தன.  அமைச்சரால் தூங்கவே முடியவில்லை. அவர், அன்று காலை முழுவதும் பயணம் செய்திருந்தார். மறுநாளும் அலைச்சல் இருக்கிறது. அதை நினைக்க நினைக்க அமைச்சருக்குக் கோபம் அதிகமானது. நாய்களோ வெறித்தனமாகக் குரைத்து, இரவின் அமைதியைக் கெடுத்தன. ஆனால், இத்தனைக்கும் மத்தியில் முனிவர் அடுத்த அறையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார். அவரை எழுப்பிய அமைச்சர்,  ''என்ன மனிதர் நீங்கள்...  இவ்வளவு சத்தத்துக்கு மத்தியில் உங்களால் எப்படி உறங்க முடிகிறது...???'' என்று புலம்பினார். முனிவரோ, தனது வழக்கமான கிண்டலுடன் கூறினார்:  ''அந்த நாய்கள், உங்களுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ இங்கு கூடவில்லை;  கோஷமிடவில்லை அந்த நாய்களுக்கு இங்கு ஒரு மந்திரி தங்கி இருப்பது தெரியாது. அவைகள் பத்திரிகை படிப்பதில்லை. அவற்றுக்கு அறிவும் கிடையாது. அந்த நாய்களுக்கும் உங...

மனிதநேயம்

மனிதநேயம்: ============    (சிறுகதை)    ========= போகும் வழியில் ஒரு மின்கம்பத்தில் ஒரு சிறு துண்டு காகிதம் எழுதி தொங்க விட பட்டிருந்தது.  அப்படி என்னதான் அதில் எழுதியிருக்கு என்ற ஆர்வத்தில் நானும் போய் படித்தேன். அதில் " என்னுடைய 50 ரூபாய் தொலைந்து விட்டது. யார் கையிலாவது கிடைத்தால் தயவு செய்து இந்த விலாசத்தில் தருமாறு கேட்டு கொள்கிறேன். எனக்கு கண் பார்வை அவ்வளவு சரியில்லை" என்று விலாசத்துடன் எழுதியிருந்தது. எனக்கும் பொழுது போகவில்லை, அந்த குறுக்கு வழியில் பார்த்த ஒரு நபரிடம் விலாசம் கூறி வழி கேட்டேன். " இந்த அம்மாவா...., கொஞ்சம் தூரம் போனால் ஓர் பழைய வீடு இருக்கும். அங்க தான் அந்த கண் தெரியாத அம்மா இருக்கு" அங்கே ஓர் சிறிய கீத்து .கொட்டகை. ஒரு நாள் மழைக்கு கூட தாங்காது. வெளியில் , கண்கள் குழி விழுந்து, எலும்பும் தோலுமாக வயதான ஓர் அம்மா .  என் காலடி சத்தம் கேட்டதும், யாருப்பா நீ? அம்மா நான் இந்த வழியாக வந்தேன், எனக்கு 50 ரூபா கீழே விழுந்து கிடைத்தது. அது உங்களிடம் தரலாம் என்று வந்தேன்.  கேட்டதும் அந்த அம்மா அழ ஆரம்பித்து விட்டார். தம்பி ரெண்டு நாளா கி...