Posts

Showing posts from February, 2022

உண்மையான குணத்தை நாம் அறியவே

குருகுலத்தில் பாடம் நடந்துகொண்டிருந்தது. “யாருக்காவது ஏதேனும் சந்தேகங்கள்இருந்தால் கேட்கலாம்” என்கிறார் குரு. ஒருமாணவன் உடனே எழுந்து, “குருவே…அனைத்து அறிந்த இறைவன் நம்மைசோதிப்பது ஏன்? சோதனைகளை சந்திக்காமல்,கஷ ்டங்களை சந்திக்காமல் அவன் அருளைபெறவே முடியாதா?” என்று கேட்க்கிறான். “நல்ல கேள்வி. இதற்கு உனக்கு நாளை பதில்அளிக்கிறேன்” என்று கூறுகிறார் குரு. மறுநாள் மாணவர்கள் ஆவலுடன் வகுப்புக்குவருகிறார்கள். மாணவர் களுக்கு முன்னாள் இரண்டு மண்ணால்செய்யப்பட்ட ஜாடிகள் இருக்கின்றன. இரண்டும்பார்க்க ஒரே மாதிரி இருந்தன. “இங்கே இருப்பது என்ன? இவற்றில் ஏதாவதுவேறுபாடு தெரிகிறதா?” மாணவர்களைகேட்கி றார். மாணவர்கள் ஒரு கணம் கழித்து “இரண்டுஜாடிகளும் ஒரே இடத்தில் தயார்செய்யப்பட்டவை தான். ஒரே கொள்ளளவுகொண்டவை தான். ”“இவற்றில் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா?”மாணவர்களை கேட்கிறார். “தெரியவில்லை”“ஆனால் இரண்டிற்கும் ஒரு பெரியவித்தியாசம் உள்ளது. ”மாணவர்களுக்கு எதிரே முதல் ஜாடியை கீழேதள்ளி கவிழ்த்தார். அதிலிருந்து தேன் வெளியேவந்தது. மற்றொரு ஜாடியை கவிழ்த்தார்அதில ிருந்து சாக்கடை நீர் வெளியே வந்தது. “ஜாடியை நான் கீழே தள்ளியவு...

ஒட்டகச்சிவிங்கியின் பிறப்பு வித்தியாசமானது

#ஒட்டகச்சிவிங்கியின்_பிறப்பு #வித்தியாசமானது....🦒🦒🦒 ஒட்டகச்சிவிங்கி நின்று கொண்டு குட்டிப் போடும் பழக்கமுடையது. சுமார் எட்டு அடி உயரத்தில் இருந்து குட்டியானது பூமியில் விழும்போதே பலமான அடிப்பட்டுக்கொண்டு தான் தன் வாழ்க்கையை துவக்குகிறது. குட்டி ஒட்டகச்சிவிங்கி தன் தாயின் கருவறையிலிருந்து வெளிவரும்போதே கிழே விழுந்து அடிபடுவதை யோசித்துப்பாருங்கள். கொடுமையான விஷயம். இதைவிட கொடுமையான விஷயம் அடுத்தது நடக்கும். தாய் ஒட்டகச் சிவிங்கி தன் குட்டியின் கழுத்தை ஒரு சில நிமிடங்கள் மெதுவாக முத்தமிடும். நாவால் நக்கிவிடும். பின்பு தன் நீண்ட கால்களால் குட்டியை ஓங்கி உதைக்கும். குட்டியானது காற்றில் பறந்து சற்று தள்ளிப் போய் விழும். ஏற்கனவேவிழுந்து அடிபட்ட வலி கூட மாறாத நிலையில் அடுத்த அடி. தாயின் கருவறையிலிருந்து வெளிவரும் போது உடம்போடு ஒட்டியிருந்த ஈரம் கூட காயவில்லை. வலியோடு தடுமாறி எழுந்து நிற்க முயற்சி செய்யும். ஆனாலும் மீண்டும் தடுமாறி கீழே விழுந்து விடும். மீண்டும் தாய் உதைக்கும். குட்டி எழுந்து நிற்க முயற்சி செய்யும். ஆனால் மீண்டும் விழுந்து விடும். குட்டி சுயமாக சொந்த காலில் எழும்பி நிற்கும் ...

சிம்பிளா யோசிச்சா தான் பல பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்

ஒரு பய..அவனுக்கு ஒரு பயங்கரமான பிரச்சினைங்க. நெட் ல தேடிப்பிடிச்சு ஒரு நல்ல சைக்கிரியாட்ரிஸ்ட் கிட்டே போனான். சொன்னான். டாக்டர் ஐயா, எனக்கு டெய்லி நைட் படுக்கறப்ப, கட்டிலுக்குக் கீழே ஒரு ஆள் படுத்திருக்கிற மாதிரி தோணும். எட்டிப் பார்த்தா அப்படி யாரும் இல்லே. பயத்துல தூங்கவே முடியறதில்லே.. டாக்டரு சொன்னாரு.. தம்பி, சரி பண்ணிடலாம். வாரம் ஒரு தபா வீதம் அஞ்சு செஷன்ஸு என்கிட்டே வாங்க. சரி பண்ணிடலாம்! ரொம்பத் தேங்ஸ் டாக்டர். எவ்வளவு பீஸு? ஓரு செஷன்க்கு 2000₹ தான். தம்பி, நான் ஒரிஜினலா கோயம்பத்தூர் பக்கம்தான். மாமியார் ஊருதான் திருச்சி. நீ வேற மதுரை உன் ஊருன்னு சொல்றே. எனக்கு மதுர ரொம்பப் புடிக்கும். அதனாலதான் 2000₹ சொல்றேன். இல்லாட்டி வழக்கமா 2500₹ . ஓ அப்டீங்களா? சரிங்க டாக்டர் ஐயா. வர்றேன். ஆனா பாருங்க.. அப்புறம் அவன் வரவே இல்லே. ஒரு ரெண்டு மாசம் கழிச்சு ஒரு ப்ளாட்பாரக் கடையில ப்ரஞ்சு ப்ரைஸ், காப்பி சாப்பிடப் போனப்ப டாக்டரு அவனைப் பாக்கறாரு. அடடே என்னா தம்பி, அப்புறம் வரவே இல்லே? அதுவா டாக்டர் ஐயா. அந்தப் பிராப்ளம் சரியாயிடுச்சு. ஓ! எப்புடீ? நம்ம திருநெல்வேலி அண்ணாச்சி ஒருத்தரு ஒரு ஐடிய...

பாவத்தின்_தந்தை_யார்

#பாவத்தின்_தந்தை_யார்..? அரசன் ஒருவனுக்குத் திடீரென்று சந்தேகம் ஒன்று வந்தது. பாவத்தின் தந்தை யார்? அரசவையில் இருந்த பண்டிதரை தனது நண்பன் போலவே அவன் நடத்தி வந்தான். அவரை நோக்கி, “பாவத்தின் தந்தை யார்? இதற்கான சரியான பதிலை நீங்கள் சொல்ல வேண்டும்.” என்றான். பண்டிதருக்கோ பெரும் குழப்பம் ஏற்பட்டது. யார் பாவத்தை உருவாக்கினார்கள்? யாரைப் பாவத்தின் தந்தை என்று சொல்வது? அவரது முகத்தில் நிலவிய குழப்பத்தைக் கண்ட அரசன், “சரி, இதற்கு உடனடியாகப் பதில் சொல்ல வேண்டாம். ஒரு வாரத்திற்குள் பதில் சொல்லுங்கள். ஆனால் சரியான பதிலைச் சொல்லாவிட்டால் தகுந்த தண்டனை உண்டு” என்று எச்சரித்தான். வீடு திரும்பிய பண்டிதர் தனக்குத் தெரிந்த நூல்களை எல்லாம் புரட்டினார். சரியான பதிலைக் காணோம். தெரிந்தவர்களிடம் கேட்டுப் பார்த்தார். அவர்கள் உதட்டைப் பிதுக்கினர். நாட்கள் கழிந்தன. ஊரில் ஓடும் நதிக்கரையின் ஓரமாக சோகமான முகத்துடன் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். நாளைக்குள் பதில் சொல்ல வேண்டுமே! அவர் முகத்தில் நிலவிய குழப்பதைப் பார்த்த தாசி ஒருத்தி பண்டிதரை அழைத்தாள். “என்ன பண்டிதரே! எப்போதும் உற்சாகமாகப் போவீர்கள். இன்று ஒரே...

தர்மம்

🙏இது கதை அல்ல🙏 படித்து முடித்ததும் ஒரு நிமிடம் கண்களை மூடிக் கொண்டு சிந்தியுங்கள் ஒரு அடியார் குடும்பம், காசிக்குச் சென்று ஈசன் திருவுளையாடலால் அங்கேயே தங்க நேரிடுகிறது. கால ஓட்டத்தில் அந்தக் குடும்பத் தலைவி இறந்து விடுகிறார். தன் ஒரே மகளை செல்லமாக வளர்ப்பதோடு, நிறைய தர்ம சாஸ்திரங்களையும் அப்பெண்ணுக்கு தந்தை கற்றுத் தருகிறார் மகளும் வளர்கிறாள். மகள் வளர, வளர, தந்தைக்கு ஒரு கவலை. ”நாமோ ஒரு எளிய வாழ்க்கை வாழ்கிறோம். இவளுக்கு ஒரு திருமணத்தை செய்து விட்டால், நிம்மதியாக இருக்கலாமே!” என்று ஆனால் மகளோ, பிடிவாதமாக “அப்பா! நான் இறைவன் ஈசன் சேவைக்கே என்னை அர்ப்பணிக்கப் போகிறேன். எனக்குத் திருமணம் வேண்டாம்”என்று உறுதிபட கூறிவிட, அக்கம், பக்கம் உள்ளவர்களும், அறிந்தவர்களும் கூட“அம்மா! நீ பெண். தனியாக வாழ இயலாது. ஒரு ஆணைத் திருமணம் செய்துதான் ஆக வேண்டும்”என்று எத்தனையோ அறிவுரைகள் கூறினாலும் ”#காசி_விஸ்வநாதர் மீது ஆணை! என்னை தொந்தரவு செய்யாதீர்கள்” என்று கூறி ஒதுங்கி விடுகிறாள். பிறகு, வேறு வழியில்லை என்பதால்,தன்னிடம் இருக்கக்கூடிய நில, புலன்களை எல்லாம் விற்று, “அம்மா! ஒரு வேளை நான் இறந்து போய்வி...

விலைமதிப்பற்ற செல்வம்

விலைமதிப்பற்ற செல்வம்... ஒரு நாள் கோவிலில் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளை வேண்டிக்கொள்ளும் போது திடீரென கடவுள் அங்குள்ள பத்து பேருக்கு மட்டும் காட்சி அளித்தார்.  காட்சி தந்த கடவுள் அந்த பத்து பேரிடம் என்ன வேண்டும் கேளுங்கள் தருகிறேன்..! என்றார்.  அவரிடம் பத்து மனிதர்களும் தம் தேவைகளைக் கேட்டனர். முதல் மனிதர் : எனக்கு கணக்கிலடங்கா காசும்இ பெரிய பிஸினஸஷும் வேண்டும் என்றான். இரண்டாம் மனிதர் : நான் உலகில் சிறந்தோங்கி பெரிய பதவியை அடைய வேண்டும் என்றான். மூன்றாம் மனிதர் : உலகப்புகழ் பெற்ற நடிகர் போல் மிகப் பெரிய புகழ் வெளிச்சம் வேண்டும் என்றான். நான்காம் மனிதர் (ஒரு பெண்) : உலக அழகியைப் போல பேரழகு வேண்டும்..! உலகமே அதில் மயங்க வேண்டும் என்றார்.  இதுபோல மீதி இருப்பவர்களும் தங்களின் ஆசைகளையும் விருப்பங்களையும் கேட்டனர்.  கடவுளும் அவர்கள் கேட்ட ஒவ்வொன்றையும் அவர்களுக்கு வரமாக கொடுத்து விட்டார். இறுதியாக பத்தாவது மனிதர் :  உலகத்தில் ஒரு மனிதர் உச்சகட்டமாய் எந்த அளவு மன நிம்மதியோடும் மன நிறைவோடும் வாழ முடியுமோ அந்த நிலை எனக்கு வேண்டும் என்றான். அப்போது ஒன்பது பேரும் அவனை ...

உடல் ஊனமாக இருந்தாலும், மனதில் எந்த ஊனமும் இல்லாத பிறவிகள்

படைப்பு - Rs Manoharan நீண்ட காலத்திற்கு பிறகு  நண்பர் ஒருவரை சந்தித்தேன். அவர் Mumbaiல் settle ஆனவர்.  Fast Food கடை மும்பை outerல். கோவை அருகில் ஒரு கிராமத்தை சேர்ந்தவர். வயதாகிவிட்டது. எனவே கிராமத்திற்கு வந்து விட்டேன். கடையையும் கொடுத்து விட்டேன் என்று கூறினார். பேசிக் கொண்டிருந்த போது  அவர் சொன்ன ஒரு விஷயம்  என்னை ஆச்சரியப்பட வைத்தது. மும்பை அவர் கடையில் 6 பேர்கள். மூன்று பேர் Sandwich makers. ஒருவர் Bearer.ஒருவர் Table Cleaner. கூட இவர் order எடுக்க, Cash வாங்க கல்லாவில். Simple Hub.. மாலை 5 மணி முதல் 9 மணி வரை  நல்ல கூட்டம் இருக்கும். அந்த சமயத்தில் இவரே Customers இடமிருந்து order வாங்கி உள்ளே சொல்ல வேண்டும்.Cash வாங்க வேண்டும்.  வேகமாக செயல்பட வேண்டும். இப்பொழுது போல Computer வசதி  எல்லாம் அப்போது இல்லை. எல்லாமே Physical Worksதான். ஒரு கட்டத்தில் கூட்டம் அதிகமாக ஆக இவரால் சமாளிக்க முடியவில்லை. Order எடுத்து Sandwichmakers வசம் சொல்வதற்கு ஒரு நம்பிக்கையான staff போட்டால் உதவியாக இருக்கும் என்று நினைத்தார். Advertisement செய்தார்.Part time 4 hours...

பங்கு

மன்னன் விளையாட்டாக செய்த தவறு... அதன் விளைவு? குட்டிக்கதை - புறம் பேசாதீர்...!! காட்டுப்பகுதியில் ஆழ்ந்த தவத்தில் இருந்தார் ஒரு மகரிஷி. அவர் தவத்தின் போதே கண் திறக்காமல், தினமும் ஒருமுறை கையை நீட்டுவார். கையில் யாராவது எதையாவது வைத்தால், அது என்ன, ஏதென்று பார்க்காமல் அப்படியே விழுங்கி விடுவார். முனிவர் கையை நீட்டும் நேரம் பார்த்து, பக்தர்கள் நறுக்கிய கனிகள், அப்பம் முதலியவற்றை வைப்பார்கள். இதனால் தங்களுக்கு புண்ணியம் சேரும் என்று அவர்கள் கருதினர். ஒருநாள் அந்த நாட்டின் அரசன் வேட்டைக்கு வந்தான். அன்று பக்தர்கள் யாரும் வரவில்லை. அந்த நேரம் பார்த்து, மகரிஷி கையை நீட்டினார். மன்னன் மகரிஷியைப் பரிகாசம் செய்யும் நோக்கத்தில், தான் வந்த குதிரை போட்ட சாணத்தில் சிறிது எடுத்து மகரிஷியின் கையில் வைத்தான். மகரிஷியும் அதை வாயில் போட்டு விட்டார். மன்னன் கலகலவென சிரித்தபடியே அங்கிருந்து போய்விட்டான். மறுநாள் மன்னனின் நலம் விரும்பியாக உள்ள வேறு ஒரு முனிவர் அரசவைக்கு வந்தார். முக்காலமும் உணர்ந்த அவர், மன்னா! நேற்று நீ காட்டில் தவமிருக்கும் மகரிஷிக்கு, குதிரைச்சாணம் கொடுத்தாய் அல்லவா?. அது நரகத்தில் மலை ...

ஷேக்ஸ்பியர்

*"தொழிலில் நேர்மை இருந்தால்..''* *..................................................* ஊரெங்கும் ஓடி ஓடி வேலை தேடியும் ஒரு வேலையும் கிடைக்காததால் ஒரு நாடகக் கொட்டகை வாசலில் சோர்ந்து படுத்துக் கொண்டு இருந்தான் ஒரு ஏழை சிறுவன்.  பசி அவனை வாட்டியது. அவனிடம் கையில் 10 பைசா கூட இல்லை. அப்போது பணக்காரர் ஒருவர் அந்த நாடகக் கொட்டகை அருகில் குதிரையில் வந்தார்.  டேய் தம்பி, இங்கு கட்டி வைக்கும் குதிரைகள் அனைத்தும் களவாடப்படுகிறது. நான் உள்ளே சென்று நாடகம் பார்த்து விட்டு வரும் வரை நீ என் குதிரையைப் பார்த்துக் கொள்கிறாயா ? நான் உனக்குப் பணம் தருகிறேன் என்று அவர் கூறினார்.  அவனும் வேகமாகத் தன் தலையை அசைத்தான். நாடகம் பார்த்து விட்டு வெளியில் வந்த பணக்காரருக்கு ஒரே ஆச்சர்யம். அந்தக் குதிரை அவருடையது தானா? என்ற ஐயப்பாடு அவருக்கு வந்து விட்டது.  அந்த அளவிற்கு குதிரையை சுத்தப்படுத்தி வைத்து இருந்தான் அந்த சிறுவன். பேசியதை விட அவனுக்கு 5 மடங்கு அதிகப் பணம் கொடுத்தார் அந்தப் பணக்காரர். மீண்டும் அடுத்த நாள் அதே இடத்தில் சிலர் வந்து அவனிடம் குதிரையை விட, அவனும் அதைப் பாதுகாத்து, சுத்தப்ப...