Posts

Showing posts from December, 2020

கடவுள் நம்பிக்கை எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

#கடவுள் #நம்பிக்கை எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? ஒரு குருவும் சீடனும் அடர்ந்த காட்டின் வழியே நடந்து வந்து கொண்டிருந்தனர். இரவு நெருங்கவே ஒரு மரத்தின் அடியில் உறங்கி காலை நடை பயணத்தை தொடரலாம் என்று முடிவு செய்து ஒரு மரத்தை தேர்ந்தெடுத்து அதனடியில் உறங்கினர். மறுநாள் பொழுது விடிந்தது குருவும் சீடனும் ஆற்றில் நீராடினர் இருவரும் சூரியனை வணங்கினார்கள் அப்பொழுது சூரிய பகவான் அசிரியாக தோன்றி "வேத குருவே! உமக்கு வணக்கம் உங்கள் வணக்கத்தை நான் ஏற்றுக்கொண்டேன் இன்று சூரியனான நான் மறைவதற்குள் உங்கள் சீடனின் உயிர் ஒரு ராஜநாகத்தால் தீண்ட பட்டு இறக்க நேரிடும். முடிந்தால் உங்கள் குரு வலிமையால் அவனை காப்பாற்றுங்கள் எ கூறி மறைந்தான் குருவும் சூரியனை வாங்கிவிட்டு சீடனை கவலையோடு பார்த்தார் இருவரும் சிறிது பழங்களை பறித்து பசியாறிய பின் அருகே உள்ள கோவிலின் இறைவனை வணங்கினர் பின் ஊரை தாண்டி காடு வழியே நடந்து சென்றனர். சற்று களைப்பு ஏற்படவே இருவரும் ஒரு மரத்தடியில் அமர்ந்து கண் அயர சீடன் தூங்கினானே தவிர குரு தூங்கவில்லை. சீடனின் உயிரை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என்று நினைத்து விழித்து இருந்தார். அப்...

ஏழைகளிடம் பேரம் பேசாதீர்கள்

"முட்டை விலை எவ்வளவுங்க," அந்த #பெண் கேட்டாள். "ஒரு முட்டை ஐந்து ரூபாய்ம்மா?" என்றார் அப் #பெரியவர். "சரி, ஆறு முட்டைகள் ₹25/- க்கு கொடுப்பீங்களா?" என #கேட்டாள். "சரிம்மா, நீ கேட்ட விலைக்கே வாங்கிக்க. காலையிலிருந்து நீதான் போணி #செய்கிறே. #கடவுள் உன்ன நல்லா வைக்கட்டும்," என்றார் அம்முட்டைக்கார பெரியவர். தான் கேட்ட விலைக்கு கிடைத்துவிட்டது என்ற சந்தோஷத்துடன் அப்பெண் முட்டைகளை வாங்கிக் கொண்டாள். பிறகு தன் அழகான காரில் தன் தோழியை அழைத்துக் கொண்டு ஒரு ஹோட்டலுக்கு சென்றாள். அவர்கள் இருவரும் ஹோட்டலில் அமர்ந்து பேசிக் கொண்டே தாங்கள் விரும்பியது வாங்கி சாப்பிட்டனர். சாப்பிட்டது குறைவு, மீதம் விட்டது அதிகம்ا பில் தொகை ₹950/-, அவள் ₹1000/- ஐ ஹோட்டல் #நிர்வாகியிடம் கொடுத்து மீதி சில்லறையை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்," என்றாள். ஹோட்டல் #உரிமையாளருக்கு இது மிகச் #சாதாரணம் விஷயம். ஆனால் முட்டை விற்ற பெரியவர்க்கு #வலி மிகுந்த விஷயம்ر “இதில் #உற்றுநோக்க வேண்டியது” நாம் உதவி தேவைப்படும் #ஏழைகளிடத்தில் ஏதேனும் வாங்கும்போது நம் பலத்தை காட்டுகிறோம். #பணக்கா...

யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம்

ஒரு பிரபல விஞ்ஞானி காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். வழியில் டயர் பஞ்சர் ஆகி விட்டது. ஆள் நடமாட்டமே இல்லை. பக்கத்தில் கடைகளும் ஏதும் இல்லை. தானே டயரைக் கழற்றி ஸ்டெப்னியை மாற்ற ஆரம்பித்தார். அனைத்து போல்ட்டுகளையும் கழற்றிவிட்டு ஸ்டெப்னி எடுக்கப் போகும் போது,கால் தடுக்கிக் கீழே விழுந்தார். கையில் இருந்த போல்ட்டுக்கள் அனைத்தும் உருண்டு போய் பக்கத்தில் இருந்த சாக்கடையில் விழுந்தன. "என்ன செய்வது?" என்று யோசித்தார். அப்போது கிழிந்த ஆடையுடன் ஒரு வழிப் போக்கன் அந்த வழியே வந்தான்.  அவரிடம் "ஐயா! என்ன ஆயிற்று?" என்று கேட்டான். அந்த விஞ்ஞானி தன் மனதிற்குள் "இந்த அழுக்கடைந்த சாக்கடையில் இறங்க இவன் தான் சரியான ஆள்" என்றெண்ணினார்.  அவனிடம், "இந்தக் சாக்கடையில் விழுந்த போல்ட்டுகளை எடுத்து கொடுக்க முடியுமா......?? எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன்" என்றார்.....!! அதற்கு வழிப்போக்கன் "இதுதான் உங்கள் பிரச்சினையா......? அந்தக் சாக்கடையில் இறங்கி போல்ட்டுகளை எடுத்துத் தர எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை. ஆனால் அதைவிட சுலபமான வழி ஒன்று இருக்கிறது........!!என்ற...

தன்ணுணர்வின் கதை

🔥ஓஷோ🔥 🔥தன்ணுணர்வின் கதை🔥 ஒரு உண்மையான ஆன்மீக வாதியின் ஒழுக்கம் எதுவும் அவன்மேல் திணிக்கப்பட்டதாக இருக்காது. அது அவனது தன்னுணர்விலிருந்து எழுந்ததாக இருக்கும். அவன் சரியானதை செய்ய வேண்டும் என்று முயற்சி செய்ய மாட்டான். தவறானது எதையும் செய்துவிடக் கூடாது எனவும் முயல மாட்டான். அவன் எதையும் விழிப்புணர்வோடு பார்ப்பான், அவனது தன்னுணர்விலிருந்து செயல்படுவான். அதனால் அவன் செய்வது எதுவோ அதுவே சரியானது. உண்மையில் தன்னுணர்வோடு இருக்கும்போது தவறானது எதையும் செய்யமுடியாது. நாகார்ஜூனா என்ற மிகச் சிறந்த ஞானியைப் பற்றி ஒரு அழகான கதை உண்டு. அவர் ஒரு நிர்வாணமாக திரியும் பக்கிரி, ஆனால் உண்மையான தேடுதல் உடையவர்கள் அனைவராலும் நேசிக்கப்பட்டார். ஒரு நாட்டின் அரசி கூட நாகார்ஜூனா மீது மிகவும் பக்தியோடு இருந்தாள். அவள் ஒருநாள் நாகார்ஜூனாவை அரண்மனைக்கு விருந்தாளியாக அழைத்தாள். நாகார்ஜூனா அரண்மனைக்குச் சென்றார். அரசி தனக்கு ஒரு உதவி வேண்டும் எனக் கேட்டாள். அவர் என்ன உதவி வேண்டும் எனக் கேட்டார். அதற்கு அரசி உங்களது பிச்சைப் பாத்திரம்தான் வேண்டும் என்றாள். நாகார்ஜூனா கொடுத்துவிட்டார் – அது ஒன்றுதான் அவரிடம் உள்ள...

400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்

*400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்* 😂😂😂 *ஊர் முழுவதும் ஓர் அறிவிப்பு* 400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம். 🤔 இதைக் கண்டுப் பலர் வியந்தனர்.  இதைப்பற்றி மேலும் விசாரித்தபோது, 400 ரூபாய் பணத்துடன் வந்து சந்திக்க வேண்டிய இடத்தின் முகவரி கிடைத்தது. 😄 ஊரே திரண்டு அந்த இடத்திற்கு வந்தது. வெறும் 400 ரூபாயில் வாழ்நாள் முழுவதும் தின்பதென்றால் சும்மாவா.😊 இடத்தை அடைந்த ஒருவன் சக நபரிடம் 400 ரூபாயா? அல்லது 4000, 40,000 ... அப்படி ஏதாவதா? என்று...🤭 400 ரூபாய் மட்டுமே என்றான்.😜 வரிசையில் உள்ள ஒவ்வொருவரும் உள்ளே சென்றனர்.🙂 . . .சார் நீங்க,  நானும் காலம் புரா உக்கார்ந்து சாப்பிட போரேன்.  . .நானும் வரேன்.  . . .சார் நானும்  . . .ஐயா வாங்க  . . .அம்மா வாங்க  . . . .அக்கா நீயுமா  . ' 'வா வா, உக்கார்ந்து.  ..400, ரூவா,  . . .வாவா  . . . . அங்கே ஒருவன் நாற்காலி விற்றுக் கொண்டு இருந்தான்.🤣 "வாங்க சார்... வாங்க சார்... ஸ்டராங்கான நாற்காலி சார்... இது சீக்கிரத்துல உடையாது சார்... 😂😂 400 ரூபாய் ...

சிக்கல்களும் - தீர்வுகளும்

.......................................................... *"சிக்கல்களும் - தீர்வுகளும்...!"* ............................................... காலம் எதற்காகவும், எவருக்காகவும் காத்திருப்பதில்லை. வாழ்க்கை ஒரு வட்டம் போல் முடிந்த இடத்தில் தொடருவதும் இல்லை, அச்சம், கவலை, வெறுப்பு, போன்ற குப்பைகளை நம் மன வீட்டிலிருந்து தூக்கி எறியா விட்டால் வாழ்க்கை நிறைவு பெறாது... பல நேரங்களில் சிக்கல்கள் ஆரம்பமான இடத்தை விட்டு நாம் தீர்வுகளை தெருவில் தேடுகின்றோம். சிக்கல்களுக்கான தீர்வை நம்மிடம் தேடுவதை விடுத்து வெளியில் தேடுகின்றோம்... நாம் என்ன தவறு செய்தோம்...? எதனால் இந்தச் சிக்கல் நேர்ந்தது..? என்று சிந்தித்து தெளிவு பெறுவது இல்லை... சரி!, நாம்தான் சிக்கல்களுக்கு ஆட்டுவிப்பவராக இருந்து விட்டோம், சிக்கல்கள் நேர்ந்தவுடன் அதை திறமையாக எதிர் கொள்கிறோமா...? அதுவும் இல்லை!. முல்லா நஸ்ருதீன் எதையோ தொலைத்து விட்டுத் தரையில் தேடிக் கொண்டு இருந்தார். 'எதைத் தொலைத்து விட்டீர்கள் முல்லா...?' என்று வழிப்போக்கர் ஒருவர் கேட்டார்... எனது வீட்டுத் 'திறவுகோல்'(சாவி) என்று கூறிவிட்டு தொடர்ந்த...