Posts

Showing posts from September, 2021

உண்மையான நல்ல வாழ்க்கை எது..??

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂 *உண்மையான நல்ல வாழ்க்கை எது..??* ஜென் துறவி தன் சீடர்களிடம் பேசிக் கொண்டிருக்கையில்,  அவர்களிடம் "ஒருவருடைய நல்ல வாழ்க்கையின் ஆயுட்காலம் என்ன?" என்று கேட்டார்.  அதற்கு சீடர்களுள் ஒருவன் "வேறு எத்தனை நூறு வயது தான்" என்று கூறினான்.  குருவோ, "இல்லை" என்றார்.  "அப்படியெனில், 90 வயது" என்று மற்றவன் கூறினான்.  அதற்கும் "இல்லை" என்று குரு கூறினார்.  அப்படியே சீடர்கள், 80? 70? என்று சொல்ல, அதற்கும் மறுத்தார்.  பின் அவர்கள் பொறுமையிழந்து "வேறு என்னவென்று நீங்களே சொல்லுங்கள்" என்று கூறினர்.  அதற்கு குரு "ஒரு வினாடி தான்" என்று கூறினார்.  "அது எப்படி ஒரு வினாடியில் நல்ல வாழ்க்கையை வாழ்ந்ததாக சொல்ல முடியும்?" என்று அனைவரும் கேட்டனர். பின் குரு, *"நல்ல வாழ்க்கை என்பது ஒரு வினாடியில் தான் தெரியும். எப்படியெனில் ஒவ்வொரு வினாடியையும், வாழ்க்கையின் தொடக்கமாக நினைக்க வேண்டும்.*  *மேலும், அதையே முடிவு என்றும் நினைக்க வேண்டும். அதிலும் அந்த வினாடியில் எந்த ஒரு பழையதையோ அல்லது வருங்காலத்தையோ நினைத...

ஒருவர் செய்த தவறு

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ஆப்பிரிக்காவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் ஓர் அரசர் இருந்தார், அவரிடம் பத்து காட்டு நாய்கள் இருந்தன.  தவறு செய்த தனது ஊழியர்களை அந்த காட்டுநாய்களுக்கு இரையாக்குவார்.  ஒருநாள் வேலைக்காரர்களில் ஒருவர் தவறான ஒரு கருத்தை சொன்னார், அரசருக்கு கோபம் வந்துவிட்டது. “இவனை நாய்களுக்கு தூக்கி எறியுங்கள்.” என்று கட்டளையிட்டார்.  வேலைக்காரன் கெஞ்சினான்,  "நான் உங்களுக்கு பத்து  வருடங்களாக சேவை செய்தேன்,  நீங்கள் இப்படி ஒரு தண்டனையை  எனக்குத் தரலாமா?   தயவுசெய்து என்னை அந்த  நாய்களுக்கு தூக்கி எறிவதற்கு  முன் பத்து நாட்கள் அவகாசம்  ஒன்று தாருங்கள்! ”  ராஜா ஒப்புக்கொண்டார்.  அந்த பத்து நாட்களில், வேலைக்காரன் நாய்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் காவலரிடம் சென்று, அடுத்த பத்து நாட்களுக்கும் தான் அந்த நாய்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகக் கூறினான்.  காவலர் குழப்பமடைந்தார், ஆனாலும் ஒப்புக்கொண்டார். அந்த வேலைக்காரன் அந்த நாய்களுக்கு உணவளித்தான், அவற்றைச் சுத்தம் செய்தான், குளிப்பாட்டவும் தொடங்கினான். ...

பாரதப்போரில் கர்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே துவந்த யுத்தம்

பாரதப்போரில் கர்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே துவந்த யுத்தம் நடைபெற்று வந்தது. (துவந்த யுத்தம் என்பது இருவருக்கு இடையே மட்டும் நடக்கும் போர்.) மிகவும் ஆக்ரோஷமான போர். இந்த துவந்த யுத்தமானது யாருக்கு வெற்றி கிட்டும் என்று யூகிக்கவே முடியாத அளவு கடுமையாக இருந்தது. ஒரு கட்டத்தில் பார்த்தன் மிகவும் சக்தி வாய்ந்த அஸ்திரம் ஒன்றை எய்து கர்ணனின் தேரை நூறு கஜம் தூரத்திற்கு தள்ளிவிட்டான். (ஒரு கஜம் என்பது 3 அடிகளாகும்). ஆனால் மீண்டும் முன்னேறிய கர்ணன், அதே போன்றதொரு சக்தி மிக்க அஸ்திரம் ஒன்றை அர்ஜூனனின் தேர் மீது எய்தான். அதனால் பத்து கஜ தூரத்திற்கு பின்னோக்கி சென்றது பார்த்தனின் தேர். அப்போது தேரில் சாரதியாயிருந்த ஸ்ரீ கிருஷ்ணர் “ஆஹா.. அற்புதம்… அற்புதம்” என்று எதிரி கர்ணனின் பராக்கிரமத்தை சிலாகித்துக் கூவினார். அர்ஜூனனுக்கு ஒரு பக்கம் ஆச்சரியம். மறுபக்கம் பொறாமை. “நாம் இதே அஸ்திரத்தை எய்து கர்ணனின் தேரை நூறு கஜ தூரத்திற்கு தள்ளியதை இந்த கண்ணன் சிலாகிக்கவில்லை. பாராட்டவில்லை. ஆனால் கர்ணனோ வெறும் பத்து கஜ தூரத்திற்கு நம் தேரை தள்ளியதை மெச்சுகிறானே… இதென்ன அநியாயம்? இதென்ன விந்தை?” “அதுமட்டுமல...

விநாயகரின் வாகனம் எலியாக மாறிய கந்தர்வன்

🌷🌿விநாயகர் சதுர்த்தி சிறப்பு பதிவு 🌷🌿 🌷விநாயகரின் வாகனமாக எலி வந்த கதை🌷 🌷விநாயகரின் வாகனம் எலியாக மாறிய கந்தர்வன்🌷 கந்தர்வர்களில் ஒருவனான கிரவுஞ்சன், விநாயகப் பெருமானின் தீவிர பக்தன். அவன் தினமும் விநாயகரை வணங்கிவிட்டுத்தான் தனது பணிகளைத் தொடங்குவான். ஒருநாள் அவன், இமயமலைப் பகுதியில் தெரிந்த இயற்கை அழகை ரசித்தபடி வான்வழியே சென்று கொண்டிருந்தான். அப்போது அழகிய பூந்தோட்டம் ஒன்றும், அதில் பூப்பறித்துக் கொண்டிருந்த அழகியப் பெண்ணும் அவன் கண்ணில் பட்டனர். வானில் இருந்து கீழிறங்கி வந்த அவன், அந்தப் பெண்ணின் அழகில் மயங்கினான். அந்தப் பெண்ணுடன் பேசி, அவளை எப்படியா வது திருமணம் செய்து, தன்னுடன் தேவலோ கத்துக்கு அழைத்துச் சென்று விட வேண்டுமெ ன்று எண்ணினான்.   பூப்பறித்துக் கொண்டிருந்த பெண்ணை நெருங்கி, ‘பெண்ணே, தேவலோகத்தைச் சேர்ந்த கந்தர்வனான நான்.. வான் வழியாகச் சென்று கொண்டிருந்த போது, உன் அழகைக் கண்டு மயங்கிக் கீழிறங்கி வந்தேன். நான் உன்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்’ என்றான். அந்தப் பெண், ‘கந்தர்வனே, நான் இங்குள்ள ஆசிரமத்தில் இருக்கும் சவுபரி முனிவரின் மனைவி மனோரமை. என் ...

நல்ல எண்ணங்களையே மனதில் உதிக்குமாறு எப்படி செய்வது?

நல்ல எண்ணங்களையே  மனதில் உதிக்குமாறு  எப்படி செய்வது?  நண்பர் கேட்டார். பொதுவாக ஓய்வாக இருக்கும் போது, நம் மனம் ஊர் மேயும். அந்த முரட்டு குதிரையை மெல்ல மெல்ல நம் வழிக்கு கொண்டு வர வேண்டும். பக்தி மார்க்கத்தில் இருப்பவர்கள் தங்கள் இஷ்ட தெய்வத்தின் திருவுருவை அடிக்கடி நினைத்தல், தெய்வ மந்திரங்களை பாராயணம் செய்தல், பகவத் கீதை, போன்ற நற்சிந்தனைகள படிப்பதை வழக்கமாக்கி கொள்ளலாம். டெல்லியில் என் நண்பரின் தந்தை உட்கார்ந்தால், நிமிர்ந்தால்,  எந்த செயல் செய்தாலும் அவரை அறியாமலேயேஹரே ராம் என்பார். ஞான மார்க்கத்தில், தியானம் செய்பவர்கள், பிரபஞ்சத்தையே அடிக்கடி நினைக்கலாம். எப்படி? நண்பர். இப்பொழுது நம் சூரியனை எடுத்து கொள்வோம்.  அது பூமியை விட19 லட்சம் மடங்கு பெரியது. சூரியனுக்கும் கடைசியாக 6 வது வட்டப்பாதையில் சுழலும் சனி என்ற கோளுக்கும் இடையே உள்ள தூரம்  88 கோடி மைல்கள்.  Just imagine. நமது சூரிய குடும்பம்  எவ்வளவு பெரியது என்று. இது போல கோடிக்கணக்கான சூரிய குடும்பங்கள் இப்பிரபஞ்சத்திலே உள்ளன. நினைத்தால் மலைப்பாக இருக்கும். பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்தை ஓய்...

மகாபாரதத்தில் கண்ணன் அழுத இடம்

*மகாபாரதத்தில் கண்ணன் அழுத இடம்...*  😭😭😭😭😭😭😭😭😭😭  *உடல் அழியக் கூடியது. ஆத்மா அழியாது* என்று *அர்ஜுனனுக்கு கீதோபதேசம்* செய்த *கண்ணன்* அழுத இடம் ஒன்று உண்டு.  அஃது எந்த இடம் தெரியுமா?  *கர்ணன்* அடிபட்டு இறக்கும் தருவாயில் இருக்கிறான். *அவன் செய்த தர்மம்*  *அவனைக் காத்து நின்றது.*   *அந்த தர்மத்தையும் கண்ணன் தானமாகப் பெற்றுக் கொண்டான்* .   *கண்ணனுக்கே* தாங்கவில்லை. *"உனக்கு ஒரு வரம் தர விரும்புகிறேன்.  என்ன வரம் வேண்டுமோ கேள்"* என்றான்.  அப்போதும் *கர்ணன் "மறு பிறவி* என்று ஒன்று வேண்டாம். அப்படி *ஒரு வேளை பிறக்க நேர்ந்தால்,* *யாருக்கும் இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும் உள்ளத்தைத் தா"* என்று வேண்டினான்.   *கண்ணன் அழுதே விட்டான்.* இப்படி *ஒரு நல்லவனா* என்று அவனால் தாங்க முடியவில்லை.   *கீழே விழுந்து கிடந்த கர்ணனை அப்படியே எடுத்து மார்போடு அனைத்துக் கொண்டான்.*   *கண்ணனின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்தக் கண்ணீரால் கர்ணனை நீராட்டினான்.*   *கர்ணன் கேட்டதோ இல்லை என்று ...

கர்ணன் கற்றது வித்தை அல்ல, வேதம்

*கர்ணன் கற்றது வித்தை அல்ல, வேதம்!* கர்ணன் பிறப்பால் சத்ரியன். வீரத்துக்குக் குறைச்சல் இல்லை. இருந்தாலும் குரு வேண்டுமே? துரோணாச்சாரியார் மறுத்துவிட, கிருபாச்சாரியாரிடம் ஒரு நாள் அதிகாலை போகிறான் கர்ணன். மாணவர்களின் திறமையை சோதிக்க, வானத்தில் பறக்கும் ஒரு பறவையை குறிபார்த்து வீழ்த்தச் சொல்கிறார் குரு. அர்ஜுனன் ஒரே அம்பில் பறவையை வீழ்த்திவிட்டு தேரேறிப் போய்விட்டான்.  இப்போது கர்ணனின் முறை. அம்பை நாணில் பூட்டியாயிற்று. ஒரு கணம் பறவையை வானில் குறி பார்த்தவன் வில்லையும் அம்பையும் கீழே வைத்து விட்டான். மிகச் சிறந்த வில் வீரனான கர்ணன் அப்படிச் செய்தது குருவுக்கு அதிசயம். காரணம் கேட்கிறார்.  குருவே இது மிகவும் அதிகாலை நேரம். இந்த நேரத்தில் ஒரு பறவை விண்ணில் பறக்கிறது என்றால் நிச்சயம் தன் குஞ்சுகளுக்கான உணவைக் கொண்டு போகிறது என்றுதான் பொருள். இப்போது திறமைக்காக அதைக் கொன்றுவிட்டால் நான் வீரனாவேன். ஆனால் அந்த இளம் குஞ்சுகள் அனாதை ஆகிவிடும். எனவே நான் கொல்ல மாட்டேன் என்றானாம். கலங்கிப்போன குரு சொன்னாராம், "கர்ணா நீ கற்றது வித்தை அல்ல வேதம்" என்று பாராட்டினார் !!! *பணத்தாலும், பதவியாலு...

பொறுப்பு

அந்த வீட்டுப் பெண் எப்போதும் வேலைப்பளுவின் காரணமாகவும், குடும்ப உறுப்பினர்கள் பற்றிய அக்கறையினாலும் ஒரு பதற்றத்தோடேயே இருப்பார். எரிச்சலும் கொள்வார். ஆனால் ஒரு சில தினங்களாக பதற்றமோ, கோபமோ, எரிச்சலோ இன்றி அவர் அமைதியோடு காணப்பட்டார்.  ஒருநாள் அவரது கணவர், "நான் நண்பர்களோடு சேர்ந்து பியர் அருந்த போகிறேன்" என்று அந்த பெண்ணிடம் கூறினார். அவரும் அமைதியாக சம்மதித்தார். மகன் தனது தாயாரிடம் தயங்கியவாறு, "அம்மா நான் எல்லா பாடங்களிலும் பின் தங்கி இருக்கிறேன்" என்றான். அதற்கு அந்த பெண்ணும், "ஒழுங்காக படித்தால் உன்னால் முடியும். முடியவில்லை என்றால் மறுபடியும் அதே வகுப்பில் இருந்து படி" என்றார் அமைதியாக. மகள் ஓடி வந்து, "அம்மா என் காரை விபத்துக்குள்ளாக்கி விட்டேன்" என்றாள் பதற்றத்தோடு. அதற்கு தாய், "கொண்டு போய் சரி செய்து விடு" என்றார். குடும்ப உறுப்பினர்கள் அவரின் அமைதியை கண்டு குழப்பம் கொள்ள ஆரம்பித்தனர். ஏதாவது மருந்துக்களை பாவித்து தன்னை அமைதிப்படுத்திக் கொள்கிறாரோ என்று கவலைப்பட தொடங்கினர். ஒருநாள் அந்த பெண்மணியே எல்லோரையும் அழைத்து அமர வைத்து...

குறைகளை நிறை செய்யும் திறமை

||| ஒரு ஊரில் ஒரு குயவனும்  ஒரு வைரம் தீட்டுபவனும் அருகருகே வாழ்ந்து வந்தார்கள்.  ~ இருவரும் தத்தம் தொழிலில் சிறந்தவர்கள்.  ~அவர்கள் செய்யும் பொருட்களை பல ஊர்களிலும் உள்ள மக்கள் விரும்பி வந்து வாங்கிச் சென்றனர். ~குயவனிடம், வைரம் தீட்டுபவன் ஒரு நாள் எப்படி இருக்கிறாய்? உன் வேலை எப்படிப் போகிறது? என்று கேட்டான். ~குயவன் அட போப்பா...!  ~எனக்குக் களிமண்ணில் வேலை..  ~நாளெல்லாம் சகதியை மேலே அப்பிக் கொண்டு கையெல்லாம் அழுக்காக்கிக் கொண்டு வேலை செய்ய வேண்டியிருக்கிறது.  ~உன்னைப் போல வெள்ளையும் சள்ளையுமாகவா இருக்க முடிகிறது..? அலுப்புத் தட்டுகிறது போ..! என்று கொட்டாவி விட்டான். ~அதற்கு வைர வியாபாரி சொன்னான் உனக்கு என்ன தெரியும் என் வேலையைப் பற்றி நாளெல்லாம் வைரத்தைத் தீட்டுகிறேன் என்று எத்தனை முறை நான் என் கையை அறுத்து ரத்த காயப் படுத்திக் கொள்கிறேன் தெரியுமா உனக்கு...?  ~உன் வேலையில் இந்த ஆபத்தெல்லாம் கிடையாதே. ~வேலை செய்து கையெல்லாம் புண்ணாகிப் போனதுதான் மிச்சம்.  ~இன்றும் நாள் முழுவதும் இந்த வேலையைத்தான் ஆபத்து என்று தெரிந்தே செய்ய வேண்டும் என்று அலுத்...

காதால்_கேட்பதும்

#சிறுகதை #காதால்_கேட்பதும் மகன் ராகவன் கூறியது கேட்டு அதிர்ச்சி அடைந்தாள் தைலாம்பாள். "அம்மா நாளைக்கு நானும் வித்யாவும் முதியோர் ஓய்வு இல்லம் பார்க்க போகிறோம்...நீயும் அப்பாவும் வர வேண்டும். காலையில் சீக்கிரமாகவே கிளம்பி விடலாம்" என்றான். "ஆமாம் அம்மா..நீங்கள் வந்து பார்த்து பிடித்திருக்கிறது என்று சொன்னால்தான் எனக்கு திருப்தி" என்றாள் மருமகள் வித்யா. "நான் அப்படி என்ன சொல்லி இவளை திட்டினேன்? வீட்டிலிருந்து அலுவலக வேலை செய்கிறாள்..கொஞ்சம் கூட மாட வந்து சமையலை கவனித்து கொள் என்று நேற்று சொன்னதுக்காக மகனிடம் சொல்லி எங்களை முதியோர் இல்லத்தில் சேர்க்க பார்க்கிறாள்...என்னதான் பாத்திரம் தேய்க்க, வீடு பெருக்கி துடைக்க, தோய்த்த துணிகளை உலர்த்த என்று வேலை செய்ய ஆட்கள் இருந்தாலும் மற்ற வேலைகள் இல்லையா? காலையில் டிஃபன், மதியம் சாப்பாடு, அவ்வபோது காஃபி என்று வகை வகையாக செய்ய வேண்டும்.. துணிகளை வாஷிங் மெஷினில் போட்டு, சோப் லிக்விட் ஊற்றி துவைக்க வேண்டும்..சமயத்தில் தண்ணீர் இல்லாமல் போனால் மோட்டார் போட்டு நேரத்துக்கு அதை ஆஃப் செய்ய வேண்டும்...மாலை காய்ந்த துணிகளை எடுத்து வ...

ஓஷோ சொன்ன கதை- தன்ணுணர்வின் கதை

💥💥💥💥💥💥💥💥💥💥 ஓஷோ சொன்ன கதை - தன்ணுணர்வின் கதை .. ஒரு உண்மையான ஆன்மீக வாதியின் ஒழுக்கம் எதுவும் அவன்மேல் திணிக்கப்பட்டதாக இருக்காது. அது அவனது தன்னுணர்விலிருந்து எழுந்ததாக இருக்கும். அவன் சரியானதை செய்ய வேண்டும் என்று முயற்சி செய்ய மாட்டான். தவறானது எதையும் செய்துவிடக் கூடாது எனவும் முயல மாட்டான். அவன் எதையும் விழிப்புணர்வோடு பார்ப்பான், அவனது தன்னுணர்விலிருந்து செயல்படுவான். அதனால் அவன் செய்வது எதுவோ அதுவே சரியானது. உண்மையில் தன்னுணர்வோடு இருக்கும்போது தவறானது எதையும் செய்யமுடியாது. நாகார்ஜூனா என்ற மிகச் சிறந்த ஞானியைப் பற்றி ஒரு அழகான கதை உண்டு. அவர் ஒரு நிர்வாணமாக திரியும் பக்கிரி, ஆனால் உண்மையான தேடுதல் உடையவர்கள் அனைவராலும் நேசிக்கப்பட்டார். ஒரு நாட்டின் அரசி கூட நாகார்ஜூனா மீது மிகவும் பக்தியோடு இருந்தாள். அவள் ஒருநாள் நாகார்ஜூனாவை அரண்மனைக்கு விருந்தாளியாக அழைத்தாள். நாகார்ஜூனா அரண்மனைக்குச் சென்றார். அரசி தனக்கு ஒரு உதவி வேண்டும் எனக் கேட்டாள். அவர் என்ன உதவி வேண்டும் எனக் கேட்டார். அதற்கு அரசி உங்களது பிச்சைப் பாத்திரம்தான் வேண்டும் என்றாள். நாகார்ஜூனா கொடுத்துவிட...