Posts

Showing posts from June, 2020

எலி தந்த பரிசு

தினம் ஓர் குட்டிக்கதை.  எலி தந்த பரிசு!  ÷÷÷÷÷🤣÷÷÷÷÷÷ முன்னொரு காலத்தில் அவந்தி நாட்டில் ஒரு வயசான தாத்தாவும் பாட்டியும் வசிச்சு வந்தாங்க. தாத்தா ஓர் விறகு வெட்டி. தினமும் காட்டிற்கு போய் விறகு வெட்டி விற்று அதில் வரும் சொற்ப வருமானத்தில் குடும்பத்தை காப்பாற்றிவந்தார். தாத்தா கொண்டு வரும் சொற்ப வருமானத்தில் சிறப்பா குடும்பம் நடத்துவாங்க பாட்டி.    அன்று காலையில் பாட்டி பொரி அரிசி மாவு உருண்டை ஒன்றை பிடித்து தர அதை எடுத்துக் கொண்டு காட்டிற்கு விறகு வெட்ட புறப்பட்டார் தாத்தா. தாத்தா பச்சை மரங்களை வெட்ட மாட்டார். உலர்ந்து போன பட்டுப்போன மரங்களைத்தான் வெட்டுவார். அப்படி ஒரு பட்டுப்போன மரத்தினை கண்டுபிடிக்க நேரம் ஆகிவிட்டது. கொண்டு வந்த உணவு மூட்டையை ஓர் மரத்தின் அடியில் வைத்துவிட்டு மரத்தினை வெட்ட ஆரம்பித்தார். தேவையான அளவு வெட்டி முடித்ததும் அதை சுமையாக கட்டி வைத்தார்.      நண்பகல் உச்சி வெயில் மண்டையை கொளுத்தவும் அருகில் இருந்த ஓடையில் முகம் கழுவி விட்டு சாப்பிடலாம் என்று முகம் கழுவிக்கொண்டு தான் உணவினை வைத்த மரத்தடிக்கு வந்தார்.       ...

சுய முயற்சி

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 நன்கு கற்றறிந்த விஞ்ஞானி ஒருவர் வண்ணத்துப் பூச்சிகளை சேகரிக்கும் ஆர்வம் கொண்ட தனது நண்பரிடம் புழு நிலையில் உள்ள ஒரு வண்ணத்துப் பூச்சியைக் கொடுத்தார். இந்தப் புழு அரிய அழகான வண்ணத்துப் பூச்சியாக வளரும் என்றும், அதைத் தொந்தரவு செய்யாமல் கவனமாகக் கண்காணித்து அதனுடைய வளர்ச்சியால் பல்வேறு நிலைகளைக் கவனித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். நண்பரும் அந்தப் புழுவை நன்கு கவனித்தார். சில நாட்களுக்குப் பிறகு அந்தப் புழுக் கூட்டின் ஓடு மெதுவாக, மிக மெல்லியதாகி, எளிதில் வெளியே தெரியக் கூடியதாகியது. அவரால் உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்க முடிந்தது. உள்ளே இருப்பது மெதுவாக அசையத் தொடங்கியது. இது அப்படியே தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நகரத் தொடங்கி, அது அந்தக் கூட்டை விட்டு வெளியே வர முயற்சித்தது. வெளியே வர முட்டி மோதியது. அதை அவர் நன்கு உணர்ந்தார். அந்தக் கூட்டை உடைத்து உதவலாம் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. இறுதியாக, அடக்க முடியாத ஆர்வம் அவரைத் தூண்டியதால் அவர் ஒரு ஊசியால் அந்த ஓட்டின் மீது துளையிட்டார். சில விநாடிகளில், அவரது விஞ்ஞானி நண்பர் விவரித்திருந்ததைப் போலவ...

புத்திக்கூர்மை

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃 ஒரு கூட்டில் புறா ஒன்று வசித்து வந்தது. அந்த புறாவுக்கு இரண்டு புறா குஞ்சுகள் இருந்தது. இந்த இரண்டும் தனது சிறு வயதினை மகிழ்வோடு கழித்து வந்தது. இவை இரண்டுக்கும் தாய் புறா உணவு கொண்டு வந்து கொடுக்கும். நாட்கள் கடந்து சென்றது. இரண்டு புறாக்களும் பருவ வயதினை அடைந்தது. தன் குஞ்சுகளின் திறமையை பரிசோதிக்க நினைத்த தாய் புறா, இரண்டு புறாக்களையும் அழைத்து, உங்களுக்கு இரை தேடிச் செல்லும் அளவுக்கு இறகுகள் வளர்ந்து விட்டது. இனி நீங்கள் தனியாக சென்று இரையை தேடி கொண்டு வர வேண்டும். நீங்கள் தேடிச் செல்லும் இரகசியத்தை ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளக் கூடாது என்றது. தன் தாயின் வேண்டுகோளுக்கு இணங்க இரண்டு புறாக்களும் இரையை தேட ஆரம்பித்தன. இரண்டில் ஒரு புறா தேடுவதற்கு முன் சேற்றில் விழுந்து தன்னை அழுக்காக்கி கொண்ட பின் இரை தேடச் செல்லும். போதிய அளவு இரை தேடிய பின் ஆற்றில் சேற்றை கழுவிக் கொண்டு இருப்பிடத்திற்கு செல்லும். இதைப்பார்த்த மற்றொரு புறா, நீ அழுக்கோடு என்னுடன் வருவதால் எனக்கு கேவலமாக இருக்கிறது. உன்னை பார்க்கும் மனிதர்கள் உன்னை ஒதுக்கி விடுகின்றார்கள், என்னை பார்க்கும்...

கவனம்

*தேன்கூடு தினம் ஒரு கதை.. (23.06.2020)*  *வார்த்தை வெல்லும் கொல்லும்..*  ஒரு அரசருக்கு அவருடைய, எல்லா பற்களும் விழுந்து பொக்கை வாயுடன் இருப்பதாக *ஒரு கனவு வந்தது..* காலையில் பீதியுடன் எழுந்த அரசர், அந்தக் கனவால் என்ன விளைவுகள் நேருமோ என்று.. பயந்துபோய் முதல் வேலையாக ஒரு நாடி ஜோதிடரை வரவழைத்தார்.. அந்த நாடி ஜோதிடர், தனது ஓலைச்சுவடியை எடுத்து, அதில் *பொக்கை வாய் கனவு*  பற்றி விளக்கியிருந்த ஒரு ஓலையை வாசித்துவிட்டு.. *"அரசே ! உங்கள் மனைவி,      குழந்தைகள், சொந்த பந்தங்கள்  எல்லாம், உங்களுக்கு முன்பே இறந்து விடுவார்கள்.. "* என்று பலன் சொன்னார்.. அந்த அரசர் மிகவும் கோபமுற்று *"இவரைப் பிடித்து சிறையில் தள்ளுங்கள்..!"* என்று உத்தரவிட்டார்..  அதன் பிறகும் மன்னரின் மனம் சமாதானம் அடையவில்லை.. இன்னொரு நாடி  ஜோதிடரை வரவழைத்து.. அவரிடம், *தன் பொக்கை வாய் கனவின் அர்த்தம் என்ன..?* என்று வினவினார்.. அந்த ஜோதிடரும் அதே மாதிரியான ஓலைச்சுவடியைத்தான் வைத்திருந்தார்.. அவரும் அதைப்பார்த்துவிட்டு, *"மன்னா..!  உங்கள் சொந்த, பந்தங்களை எல்லாம் விட.. நீங்கள் நீண்ட...

உழைப்பு

*உழைப்பின் அருமை..!!* ஒரு செல்வந்தர் தனது மகனுக்கு தொழில் மற்றும் படிப்பினை பெற்று கொள்வதற்காக தனது நண்பரின் நிறுவனம் ஒன்றில் பணி செய்ய தனது மகனை 6 மாத காலத்திற்கு அனுப்பி வைத்தார். அவர் மகனோ எந்த வேலையும் செய்யவில்லை. ஆனாலும் தனது நண்பர் மகன் என்பதால் அவரும் கண்டுகொள்ளாமல் 6 மாதம் கடந்தவுடன் ஒரு தங்க நாணயத்தை கூலியாக கொடுத்து அனுப்பினார். அந்த நாணயத்தை தனது அப்பாவிடம் மகன் கொண்டு வந்து கொடுத்தான் அதனை வாங்கிய அப்பா அதனை தூக்கி தூர எறிந்தார். அதை கண்ட மகனோ ஒன்றும் கண்டு கொள்ளாமல் தனது படுக்கை அறைக்கு சென்று விட்டான். மீண்டும் இன்னொரு தெரிந்த நண்பரிடம் 3 மாதத்திற்கு வேலைக்கு அனுப்பினார். அங்கும் இப்படித் தான் எந்த வேலையும் செய்யாமல் 3 மாதம் கடத்தினான். ஆனாலும், தனது நண்பர் மகன் என்பதால் அவரும் 2 தங்க நாணயங்கள் கொடுத்து அனுப்பினார் அதையும் அப்பாவிடமே கொண்டு வந்து கொடுத்தான் முன்பு போலவே அந்த 2 நாணயங்களையும் தூக்கி தூர எறிந்தார். அப்போதும் கண்டு கொள்ளாமல் மாடிக்கு சென்று விட்டான் சிறிது காலம் கழித்து அறிமுகம் இல்லாத ஒருவர் இடத்தில் வேலைக்கு சேர்த்து விட்டார். அங்கு 3 மாதம் வேலை செய்து விட...

Nepolean

*நெப்போலியனுக்குக் கிடைத்த அடி..!!* தன் அசாத்திய துணிச்சலால் ஐரோப்பிய கண்டத்தில் தன் பேரரசை நிறுவிய மாவீரன் நெப்போலியன் பயம் என்றால் என்னவென்றே தெரியாதவர். அதற்கு அவருடைய சிறு வயதில் நடந்த ஒரு சம்பத்தையே உதாரணமாகக் கூறலாம். நெப்போலியன் பிரான்சில் உள்ள ராணுவப் பள்ளியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தார். அப்போது விடுதியில் தங்கியிருந்த சக மாணவனின் அழகிய பை ஒன்று காணாமல் போய்விட்டது. உயர் அதிகாரியிடம் அந்த மாணவன் புகார் தெரிவித்தான். “ யார் மீதாவது உனக்குச் சந்தேகம் இருக்கிறதா?” என்று அதிகாரி கேட்டார். “ஆமாம், எனக்கு நெப்போலியன் மீது தான் சந்தேகம்” என்றான் அந்த மாணவன். உடனே நெப்போலியனை அந்த அதிகாரி தன் அறைக்கு அழைத்தார். உள்ளே நுழைந்த நெப்போலியனிடம் கேள்வி எதுவும் கேட்கும் முன்பே, கண்மண் தெரியாமல் அடித்தார். “ஏன் திருடினாய்... இனி செய்வாயா?” எனக் கேட்டு நல்ல உதை, அடி. அத்தனையையும் வாங்கிக் கொண்டு அமைதியாக இருந்தார் நெப்போலியன். சில நாட்கள் கழிந்தன. புகார் கொடுத்த சக மாணவன் அந்த அதிகாரியிடம் ஓடி வந்தான். “ஐயா, என் பொருளைத் திருடியது நெப்போலியன் அல்ல. இன்னொருவன். என்னை மன்னியுங்கள்” என்றான்...