Posts

Showing posts from January, 2022

அறிவு, ஞானம் என்றால் என்ன?

அறிவு என்றால் என்ன? ஞானம் என்றால் என்ன? இரண்டுக்கும் வித்தியாசம் என்ன? பகவான் ராமகிருஷ்ணரிடம் பாடம்  படிப்பதில் நிறையப் பயன்கள் உண்டு.  அவர் எந்த ஒரு விஷயத்தையும்  மிக மிக எளிமையாக விளக்குவார். புரியாததைப் புரிய வைப்பார்.  அன்றாட வாழ்க்கையில் உள்ள எளிய உதாரணங்களைக் கூறி தெளிவடையச் செய்வார். அவற்றுள் ஒன்றுதான் இது: பகவான் ராமகிருஷ்ணரிடம்  மூன்று மாணவர்கள் பாடம்  படித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அறிவு, ஞானம்  பற்றிய ஐயம் இருந்தது. அறிவு என்றால் என்ன? ஞானம் என்பது எது? "  என்று குருவிடம் கேட்டனர். அவர் அறிவு, ஞானம் பற்றி பல நாள்கள்பாடம் எடுத்தும் அவர்கள்  மூவருக்கும் அது முழுவதுமாக  விளங்க வில்லை. இரண்டிற்குமுள்ள வேறுபாட்டை உணர முடியவில்லை. பகவான் ராமகிருஷ்ணர் மூன்று மாணவர்களையும் அழைத்து, "இன்று உங்களுக்கு ஞானம்_என்பது_எது? என்பதை ஒரு செயல் மூலம் விளக்கப் போகிறேன்'' என்று சொல்லிவிட்டு மூவரையும் ஒரு அறையில் உட்கார வைத்தார். அவர் மற்றொரு அறைக்குச் சென்று சிறிது நேரத்தில் வெளியே வந்தார். அறையின் கதவுகளை மூடிவிட்டு அம்மூவரின் அருகில் வந்த...

வாழ்க்கை எவ்வளவு அழகானது

*அழகான வாழ்க்கை எது?*  *ஒரு முடிவுக்கு வரும் முன்,* *யோசித்து முடிவு செய்யுங்கள். அப்போது தான் உங்கள் வாழ்க்கை மட்டுமல்ல உங்களை சுற்றியிருக்கும் உறவுகள் வாழ்க்கையும் அழகாய் , ஆனந்தமாய் அமையும்.* *ஒரு செல்வந்த முதலாளியின் வீட்டில் ஒருவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.*  *முதலாளி தினமும் வீட்டுக்கு வரும் போது, ஓடோடிச் சென்று கதவை திறந்து, அவருக்கு வணக்கம் சொல்வது இவரது அன்றாட வழக்கம்.* *ஆனாலும் ஒரு நாளேனும் அந்த முதலாளி இவரின் வணக்கத்துக்கு பதில் கூறியதே கிடையாது.* *காவலாளியின் முகத்தை ஏறெடுத்துப் பார்ப்பதும் கிடையாது.* *ஒரு நாள் பசியோடிருந்த அந்தக் காவலாளி வீட்டுக்கு வெளியே உள்ள குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட உணவுகள் ஏதும் இருந்தால் எடுத்து சாப்பிடுவோம் எனக் குப்பைத் தொட்டியில் தேடிய போது முதலாளி அதனைக் கண்டார்.*  *ஆனாலும் வழக்கம் போலவே அதையும் கண்டு கொள்ளாமல் சென்று விட்டார்.* *முதலாளி பார்த்தது, காவலாளிக்குத் தெரியாது.*  *அடுத்த நாள் அதே இடத்தில் காவலாளி உணவைத் தேடும் போது புதிதாக தயாரிக்கப்பட்ட சுத்தமான உணவுகள் ஒரு பையினுள் காணப்பட்டது.* *காவலாளி சந்தோஷத்தில் எங்...

பொறுமை

 புத்தரின் ஆசிரமத்திற்குள் நுழைந்த ஒரு வியாபாரி அவர் கன்னத்தில் அடித்தான். தான் பாடுபட்டுச் சேர்த்த சொத்துக்களை விட்டுவிட்டு தனது குழந்தைகள் புத்தரின் ஆசிரமத்தின் சேர்ந்ததே அவனது கோபத்திற்கு காரணம்.                           புத்தர் அவனை பார்த்து புன்னகைத்தார். ஒரு வார்த்தையோ  எதிர்வினையோ காட்டவில்லை. அந்த வியாபாரியும் அதிர்ச்சியுடன் வீடு திரும்பினான். அவனால் அன்று இரவு உறங்க முடியவில்லை் அந்த வியாபாரிக்கு அவன் இதுவரை கண்டு வந்த உலகமே தலை கீழாக மாறிவிட்டது. அடுத்த நாள் விடிந்தும் விடியாமல் ஆசிரமத்துக்கு போனான், அந்த வியாபாரி. புத்தரிடம் நேரடியாகச் சென்று புத்தர் கன்னத்தில் அறைந்ததற்கு  மன்னிப்பு கேட்டான். "என்னால் உன்னை மன்னிக்க முடியாது"என்றார் புத்தர். 'என்ன தவறு செய்தாய் மன்னிப்பதற்கு' என்று கேட்டார்.  முன்தினம் நடந்ததை வியாபாரி நினைவு படுத்தினான் அதற்கு புத்தர் அமைதியாக "அந்த நபர் இப்போது இங்கு இல்லை. நீ அடித்தவரை நான் எப்போதாவது சந்தித்தால் அவனிடம் நீ மன்னிப்பு கேட்டதாக சொல்கிறேன். இங்கே இப்போது இர...

மனிதன் காளை

வயலில் உழுதுகொண்டிருந்தார் அந்த விவசாயி. காளைக்கு கஷ்டந்தெரியக்கூடாதென்பதற்காக அதனுடன் பேசிக்கொண்டே உழுதார். மாடு நீ.. முன்னால போற. மனுஷன் நான்.. பின்னால வர்றேன். பாத்தியா..! இதான் என் தலையெழுத்து. விவாசயத்தொழில்லநீதான் முன்னாடி நான் பின்னாடிதான். முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு சொன்னார். அடடா.. இந்த மனிதஜாதிதான் எவ்வளவு மேலானது என்று நினைத்து சிலிர்த்துப்போனது காளை. விவசாயி தொடர்ந்தார். நீயும் நானும் இந்த விவசாயத்தில் கூட்டாளி. அதனால வர்ற விளைச்சல்ல உனக்கு பாதி எனக்கு பாதி. காளைக்கு தலைச்சுற்றியது.எவ்வளவு நேர்மை..! பாதிக்குப்பாதி பங்குதர யாருக்கு மனசுவரும்..! பாதிப்பாதின்னா எப்படி பங்குவைக்கலாம்?நீ முன்னால போறதால முன்னால கிடைக்குறது உனக்கு. பின்னால கிடைக்குறது எனக்கு. சரியா? என்றார் விவசாயி. முன்னால வர்றது எல்லாமே எனக்கா..! பெருமிதமாய் பார்த்தது காளை. விதைவிதைத்து நாற்றுநட்டு சிலகாலத்தில் பச்சைப்பசேலென்று மாறியிருந்தது வயல். மாட்டுக்கு வாயெல்லாம் எச்சில். விவசாயியை பார்த்தது. முதல்ல வந்த இதெல்லாம் உனக்கு. இதுல அப்புறமா ஒன்னு வரும். அதுமட்டும் எனக்கு. சரியென்று தலையாட்டியது காளை. கொஞ்சநா...

பாலும்,கறியும் உண்டாலும் பூனை பூனைதான்!பட்டினி கிடந்தாலும் புலி புலிதான்

ஒரு குட்டி நகைச்சுவை கதை.... உலக அளவில் பூனைகளுக்கான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது! அனைத்து நாட்டு பூனைகளையும் வீழ்த்தி அமெரிக்கா பூனை முன்னனியில் இருந்தது! இந்தியா பூனை பாகிஸ்தான் பூனை ஜெர்மனிபூனை ஆஸ்திரேலியா பூனை இப்படி அத்தனை நாட்டு பூனைகளும் அமெரிக்க பூனையிடம் அடிவாங்கி சுருண்டு கிடந்தன! அமெரிக்கா பூனையல்லவா பாலும், இறைச்சியும் அளவிற்கு அதிகமாக உண்டு கொழுத்து கொழு,கொழுவென இருந்தது! கடைசி இறுதி சுற்று.... இந்தச் சுற்றில் அமெரிக்க பூனையிடம் சோமாலியா நாட்டுப் பூனை மோதப்போவதாக அறிவித்தார்கள்! பார்வையாளர்களுக்கு வியப்பு! சோமாலியா நாட்டு பூனை நோஞ்சானாக மெலிந்து நடக்கவே தெம்பற்று தட்டுத்தடுமாறி முக்கி முணங்கி மேடையேறியது! இதுவா அமெரிக்க பூனையிடம் மோதப்போகிறது! பார்வையாளர்கள் கேலியும் கிண்டலுமாய் சிரித்தார்கள்! போட்டித்துவங்கியது! அமெரிக்கா பூனை அலட்சியமாக சோமாலியா பூனையின் அருகில் நெருங்கியது! சோமாலியா பூனை முன்னங்காலை சிரமப்பட்டு தூக்கி பறந்து ஒரேஅடி! அமெரிக்க பூனைக்கு மண்டைக்குள் ஒரு பல்பு பளீச் என்று எரிந்து படாரென வெடித்து சிதறியது! கண்கள் இருண்டு மயங்கி சரிந்தது. பார்வையாளர்கள் அதி...

மன அமைதி

*மன அமைதி* அவர் ஒரு விவசாயி. அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் ஒரு சிறிய பண்ணை வீட்டில் இருந்த அவர், பல ஆண்டுகளாகத் தன் கையில் ஒரு கடிகாரம் கட்டியிருந்தார்.  அவரைப் பொறுத்தவரை அது வெறும் கைக்கடிகாரம் அல்ல.சென்டிமென்ட். பல நல்ல தருணங்கள், வெற்றிகள் அவருக்கு நிகழ்ந்ததற்கு அந்தக் கடிகாரம் தான் காரணம் என்கிற நம்பிக்கை அவருக்கு இருந்தது.  ஒருநாள் பண்ணை வேலையெல்லாம் முடிந்து வெளியே வந்த பிறகு தான் கவனித்தார். அவர் கையில் கட்டியிருந்த கடிகாரத்தைக் காணவில்லை.  உடனே பரபரப்பாகி, தன் விவசாயக் கிடங்குக்குள் (Barn) போய்த் தேட ஆரம்பித்தார். எவ்வளவு நேரம் தேடியும் கடிகாரம் கிடைக்கவில்லை. கவலையோடு வெளியே வந்தார். அவருடைய கிடங்குக்கு வெளியே சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.  அவருக்கு உடனே ஒரு யோசனை வந்தது.. “டேய்... பசங்களா!” என்று அழைத்தார். சிறுவர்கள் ஓடி வந்தார்கள்.  இந்தக் கிடங்குக்குள்ள என் கடிகாரம் காணாமல் போயிடுச்சு. கண்டு பிடிச்சு கொடுப்பர்களுக்கு அருமையான பரிசு ஒண்ணு தருவேன்” என்றார். மாணவர்கள் துள்ளிக் குதித்தபடி, அவருடைய வேளாண் கிடங்குக்குள் ஓடினார்கள். அத...

த்யானம்

த்யானம் பற்றி துக்ளக் சோ எழுதிய நகைச்சுவை கட்டுரை! 😀 எவ்வளவோ பேர் தினமும் தியானம் செய்வதாகக் கூறுகிறார்களே, நாமும்தான் செய்து பார்ப்போமே என்ற நல்லெண்ணம் ஒரு நாள்  திடீரென்று எழுந்தது.  கூடவே, 'உன்னால் முடியுமா...?' என்று உள் மனம் கேள்வி கேட்டது. 'அதிகமில்லை ஜென்டில்மேன்!- ஜஸ்ட் ஐந்தே நிமிடம் பண்ணித்தான் பார்க்கறேனே... என்று அதற்குச் சவால் விட்டு விட்டுக் காரியத்தில்  இறங்கினேன். கண்கள் திறந்திருந்தால், கண் வழியே மனம் சென்று விடுகிறது. எனவே, கண்களை இறுக மூடிக்கொண்டு மனத்தைக் கட்டிப் போட்டேன்.  சனியனே! எங்கும் நகராதே. இங்கேயே நில். "மாநில செய்திகள் வாசிப்பது ஜெயாபாலாஜி. சட்டசபையில் நேற்று மீண்டும் அமளி ஏற்பட்டது. மத்திய அரசின் மீது முதல்வர் புகார்  கூறியிருக்கிறார்..." "அட சட்! கமலா அந்த ரேடியோவைக் கொஞ்சம் ஆஃப் பண்ணேன். ஒரே நியூஸை எத்தனை வருஷமாகக் கேக்கறது? ஒரு அஞ்சு நிமிஷமாவது  தியானம் பண்ண விடு!" ரேடியோ அணைக்கப்பட்டது. ஏன் கடவுள் காதுகளுக்குக் கதவு வைக்கவில்லை? உஸ்ஸ்... மனக் குரங்கே தேவையற்ற சிந்தனை வேண்டாம்.  ஒழுங்காகத் தியானம் செய். அமைதி. மின் விசி...

தியானம், தற்சோதனை, மெளனம், தவவிரதங்கள்

ஒரு சாமியாரின் ஆசிரமத்துக்கு  அவர் நண்பர் ஒருவர் வந்தார். அவருக்கு உணவு கொடுக்க விரும்பிய சாமியார்",தான் வளர்த்த குரங்கைப்  பார்த்து இலை போடு என்றார்.. குரங்கு வாழை இலை  எடுத்து வந்து போட்டது.. உடனே சாமியார் தன் கையில் வைத்திருந்த பிரம்பால் குரங்கின் தலையில் ஓங்கி அடித்து சாதம் போடு என்றார். குரங்கு சாதம் கொண்டு வந்து பரிமாறியது.. திரும்பவும் தலையில் அடித்தார். அவர் சொன்னதை எல்லாம் குரங்கு  சரியாகச் செய்தாலும் அடி விழுந்து கொண்டே இருந்தது... நண்பருக்கு மனம் பொறுக்கவில்லை.. சாமி குரங்கு தான் நீங்கள் சொன்னதை எல்லாம் சரியாகச் செய்கின்றதே..?? அந்த வாயில்லாச் ஜீவனை ஏன் அடித்துத் துன்புறுத்துகிறீர்கள் என்று கேட்டார். சாமியார் எதுவும் பேசவில்லை.. சிரித்து விட்டுப் பிரம்பை தானிருந்த  பாயின் கீழே ஒளித்து வைத்தார்... சற்று நேரத்தில் குரங்கு தாவிப் பாய்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவரின் தோளில் ஏறி இருந்தது.. காதைப் பிடித்து இழுத்தது.. தலை மயிரைப் பிரித்துப் பேன் பார்த்தது... சாப்பிட்ட இலையில் வாலைத்  தொங்க விட்டு ஆட்டியது. உடனே சாமியார் நண்பர்,ஐயோ சாமி இந்தக் குரங்கின...

நம்ம தகுதிக்கு தகுந்த மாதிரி கேட்கிறோம்

நாட்டுக் கோட்டை பணக்கார செட்டியார் ஒருத்தர் அவருடைய 60 ம் கல்யாண விழாவுக்கு சுகி சிவம் அவர்களை பேச அழைத்திருந்தார். சுகி சிவமும் போக ஒத்துக்கிட்டார். எவ்வளவு சன்மானம் தரணும்னு செட்டியார் அவர்கள் சுகி சிவம் அவர்களிடம் கேட்டார். உங்க தகுதிக்கு தகுந்த மாதிரி தாங்களேன்னு சுகி சிவம் சொன்னார். நிகழ்ச்சியில் சுகி சிவம் பேசி முடித்ததும், அவரின் பேச்சை மிகவும் பாராட்டியதுடன், ஒரு கவரையும் கொடுத்தார் செட்டியார். (கவரில் ரூ 10,000/- இருந்தது) மேலும் மறு வாரம் ஒரு பாட்டு கச்சேரி நடத்த இருப்பதாகவும், நல்ல பாடத் தெரிந்த ஒருவரை சொல்லுங்கன்னு சுகி சிவத்திடம் செட்டியார் கேட்டார். சுகி சிவமும் தனக்கு தெரிந்த, நல்லா பாடக் கூடிய, ஆனால் பிரபலமாகாத ஒரு பாடகரை பற்றி சொன்னார். அவருக்கு எவ்வளவு சன்மானம் கொடுக்கணும்னு செட்டியார் கேட்க, "உங்க தகுதிக்கு தக்கபடி கொடுங்க" ன்னு சுகி சிவம் வழக்கம்போல சொன்னார். இல்ல இல்ல... தொகையை சொல்லுங்கன்னு செட்டியார் வற்புறுத்தி கேட்கிறார். சுகி சிவமும் சரி ஒரு 2000/- ரூபாய் கொடுங்களேன்னு சொன்னார். செட்டியாரும் நேரடியாக பாடகரிடம் தொடர்பு கொண்டு அவரையே பாட ஏற்பாடு செய்தா...

Seniors are Seniors

Seniors are Seniors: ஒரு வீட்டில் வயதான தம்பதியர் வசித்து வந்தனர். ஒரு நாள் இரவில் தன்னீர் குடிக்க எழுந்த மனைவி தன் வயதான கனவனை எழுப்பி "என்னங்க இங்க பாருங்க இப்ப நான் ஜன்னல் வழியாக பார்த்தப்ப கார் ஷெட்ல லைட் எரிஞ்சுக்கிட்டு இருக்குதுங்க. அதை போய் ஆஃப் செஞ்சுட்டுவாங்களேன்" என்று சொன்னாள்.  பாவம் அந்த மனுசனும் கஷ்டப்பட்டு கட்டிலில் இருந்து இறங்கி முனகிக்கொண்டே வாசல் கதவும் திறந்து வெளியில் வந்து பார்த்தா ஒரு ஐந்தாறு பேர்கள் கார்ஷெட் கதவை உடைச்சுன்டு இருக்கறதை பார்க்கின்றார். உடன் வீட்டுக்குள் வந்து பக்கத்திலிருக்கும் காவல் நிலையத்த கூப்பிட்டு  "ஐயா "  வீட்டு அட்ரஸ்சை சொல்லி  "எழுதிக்கிடுங்கய்யா. இங்க நாங்க வயசான புருஷன் பொண்டாட்டி மட்டும்தான் இருக்கோங்கய்யா ஒரு ஐந்தாறு திருட்டு பயலுக எங்க வீட்டு கார் ஷெட் கதவை உடைச்சிட்டு இருக்காங்கய்யா. உடனே ஒரு போலீஸ் டீமை அனுப்புங்கய்யா " என்று தகவல் கொடுத்தார். அந்தப் பக்கம் போனை எடுத்த ஆளு  "நாங்க உங்க வீட்டு விலாசத்த எழுதிக்கிட்டோம் கவலைப்படாதீங்க இப்ப இங்க யாரும் Free ஆ இல்லை. யாராவது வந்தவுடனே அவங்களை உங்க வீட...