தன்னுள் இருப்பது தெய்வம்
வாழ்க வளமுடன்! தன்னுள் இருப்பது தெய்வம் என்று உணரும் போது தன்னை உணர முடியும். அதற்காக ஒரு கதை. ஒரு குருவிடம் பல சீடர்கள் படித்து வந்தனர். அச்சீடர்களில் ஒருவன் தான் எப்போதும் இரவில் கிருஷ்ணனுடன் விளையாடுவதாகக் கூறிக் கொண்டு இருப்பான். மற்ற சீடர்களுக்கு இவனைக் குறித்து பெருமைப் படுவர். தங்களுடன் விளையாட கடவுள் வரவில்லையே என ஏங்குவர். படிப்பிற்கு உரிய காலம் முடிந்தது.அவர்கள் தேர்ச்சி பெற்றுவிட்டனரா எனச் சோதிக்க குரு விரும்பினார்.எனவே தன் ஆசிரமம் வழியாகச் சென்ற ஒரு ஞானியரை அழைத்து வந்தார்.அந்த ஞானியர் குயவராய் இருந்தவர். மண்பானை வெந்ததா எனச் சரிபார்க்க கையில் ஒரு குச்சியை வைத்து தட்டிப்பார்ப்பார். தட்டும்போது " "ங்" என்ற சத்தம் வரும். அதைக்கொண்டு பானையைச் சோதிப்பார். ஞானியான பின்னும் கையில் அக்குச்சி வைத்து இருந்தார். குரு அழைத்தவுடன் ஞானி, சீடர்களைச் சோதிப்பதாக ஒப்புக் கொண்டார். அனைத்து சீடர்களையும் அமர வைத்து கண்ணை மூடி தவ நிலையில் இருக்க வைத்தார்.பின்னர் குச்சிக் கொண்டு மண்டையில் தட்டிப் பார்த்து முடிவு சொன்னார். ஒரு சீடனைத் தவிர அனைவரும் தேர்ச்ச...