சிங்கத்தின் வீரம், வேகம், கடைசி காலம்
🧚🏻♀️ *வாழ்க்கை களஞ்சியம்* 🧚🏻♂️ 🌳 *மரம்-2* 💐 *பூக்கள்-62* *சிங்கத்தின் வீரம், வேகம், கடைசி காலம்* எத்தனை காலம் வாழ்ந்தாலும் மாபெரும் சிங்கமும் பரிதாபத்துக்குரிய வகையில் தான் மரணத்தின் பிடியில் வீழும். இளம் வயதில், சிங்கங்கள் பாயும், துரத்தும், பிடிக்கும், தின்னும், விழுங்கும், வேட்டையாடும், மிச்சத்தை கழுதை புலிகளுக்கும் பிற விலங்கினங்களும் கும் விட்டுச் செல்லும், காட்டினை ஆளும். ஆனால் அதனுடைய வாழும் காலம் சீக்கிரம் கடந்துவிடும். வயதான காலத்தில் சிங்கங்களால் வேட்டையாட முடியாது; கொல்ல முடியாது; தன்னைத்தானே காத்துக் கொள்ளக் கூட முடியாது. திரியும், உறுமும், சீற்றம் குறையாது. இறுதியில் கழுதைப் புலிகள் ஒன்றுகூடி வயதான சிங்கங்களை அடித்து சாப்பிடும். அதுவும் சுலபமான மரணமாக இருக்காது. சிங்கங்கள் உயிரோடு இருக்கும்போதே அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாய் கடித்து தின்பன கழுதைப்புலிகள். பொதுவாக, ஒன்று இளம் வயதிலேயே வேட்டையாடும் போது ஏற்பட்ட காயங்களால் சிங்கங்கள் சாகும். இல்லையேல் வயதான காலத்தில் கொடூரமாக கொல்லப்பட்டு சாகும். இதுதான் உலகம்; இதுதான் வாழ்க்கை. மிகவும் குறுகிய காலக் கட்டமான, இந்த வ...