நல்ல எண்ணங்களையே மனதில் உதிக்குமாறு எப்படி செய்வது?
நல்ல எண்ணங்களையே மனதில் உதிக்குமாறு எப்படி செய்வது? நண்பர் கேட்டார். பொதுவாக ஓய்வாக இருக்கும் போது, நம் மனம் ஊர் மேயும். அந்த முரட்டு குதிரையை மெல்ல மெல்ல நம் வழிக்கு கொண்டு வர வேண்டும். பக்தி மார்க்கத்தில் இருப்பவர்கள் தங்கள் இஷ்ட தெய்வத்தின் திருவுருவை அடிக்கடி நினைத்தல், தெய்வ மந்திரங்களை பாராயணம் செய்தல், பகவத் கீதை, போன்ற நற்சிந்தனைகள படிப்பதை வழக்கமாக்கி கொள்ளலாம். டெல்லியில் என் நண்பரின் தந்தை உட்கார்ந்தால், நிமிர்ந்தால், எந்த செயல் செய்தாலும் அவரை அறியாமலேயேஹரே ராம் என்பார். ஞான மார்க்கத்தில், தியானம் செய்பவர்கள், பிரபஞ்சத்தையே அடிக்கடி நினைக்கலாம். எப்படி? நண்பர். இப்பொழுது நம் சூரியனை எடுத்து கொள்வோம். அது பூமியை விட19 லட்சம் மடங்கு பெரியது. சூரியனுக்கும் கடைசியாக 6 வது வட்டப்பாதையில் சுழலும் சனி என்ற கோளுக்கும் இடையே உள்ள தூரம் 88 கோடி மைல்கள். Just imagine. நமது சூரிய குடும்பம் எவ்வளவு பெரியது என்று. இது போல கோடிக்கணக்கான சூரிய குடும்பங்கள் இப்பிரபஞ்சத்திலே உள்ளன. நினைத்தால் மலைப்பாக இருக்கும். பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்தை ஓய்...
Comments
Post a Comment