கவனம்

*தேன்கூடு தினம் ஒரு கதை.. (23.06.2020)* 

*வார்த்தை வெல்லும் கொல்லும்..* 
ஒரு அரசருக்கு அவருடைய, எல்லா பற்களும் விழுந்து பொக்கை வாயுடன் இருப்பதாக *ஒரு கனவு வந்தது..*

காலையில் பீதியுடன் எழுந்த அரசர்,

அந்தக் கனவால் என்ன விளைவுகள் நேருமோ என்று.. பயந்துபோய் முதல் வேலையாக ஒரு நாடி ஜோதிடரை வரவழைத்தார்..
அந்த நாடி ஜோதிடர், தனது ஓலைச்சுவடியை எடுத்து, அதில் *பொக்கை வாய் கனவு*  பற்றி விளக்கியிருந்த ஒரு ஓலையை வாசித்துவிட்டு..
*"அரசே ! உங்கள் மனைவி,      குழந்தைகள், சொந்த பந்தங்கள்  எல்லாம், உங்களுக்கு முன்பே இறந்து விடுவார்கள்.. "*
என்று பலன் சொன்னார்..

அந்த அரசர் மிகவும் கோபமுற்று *"இவரைப் பிடித்து சிறையில் தள்ளுங்கள்..!"* என்று உத்தரவிட்டார்.. 

அதன் பிறகும் மன்னரின் மனம் சமாதானம் அடையவில்லை..

இன்னொரு நாடி  ஜோதிடரை வரவழைத்து..
அவரிடம், *தன் பொக்கை வாய் கனவின் அர்த்தம் என்ன..?* என்று வினவினார்..

அந்த ஜோதிடரும் அதே மாதிரியான ஓலைச்சுவடியைத்தான் வைத்திருந்தார்..

அவரும் அதைப்பார்த்துவிட்டு, *"மன்னா..!  உங்கள் சொந்த, பந்தங்களை எல்லாம் விட.. நீங்கள் நீண்ட காலம் நீடூழி வாழ்வீர்கள்.."* என்று பலன் கூறினார்..

இதனால் மனம் குளிர்ந்த அரசர், அந்த *ஜோதிடருக்கு தகுந்த பரிசுகள் வழங்கி அனுப்பி வைத்தார்..* 

_இருவரும் அதே ஓலையைத் தான் படித்தார்கள்..!_
_அதே விஷயத்தைதான் சொன்னார்கள்.._

 *ஒருவர் எல்லோரும் இறந்து விடுவார்கள் என்றார்..!* 

 *இன்னொருவர் எல்லோரையும் கடந்து வாழ்வீர்கள் என்றார்..!* 

*அவ்வளவு தான் வித்தியாசம்..!* 

 _பேசும் வார்த்தைகளை கவனமுடன் உபயோகித்தால்,_ 
_"வாழ்க்கையை ஜெயிக்கலாம்.."_
🐝
*நாம் பேசும் வார்த்தைகள், மற்றவரை சந்தோஷப்படுத்த வேண்டுமே..* தவிர,
எந்தவித மனகசப்பும் ஏற்படாமல் பார்த்துக் 
கொள்ளவேண்டும்..

🐝

Comments

Popular posts from this blog

நல்ல எண்ணங்களையே மனதில் உதிக்குமாறு எப்படி செய்வது?

சிங்கத்தின் வீரம், வேகம், கடைசி காலம்

உன் பேர் சொல்லு